”நீயும் உன் சந்தேகமும் போக்கா”
”சரி சரி ம் காதல் வந்தா எல்லாரும் மாறுவாங்கன்னு கேள்விப்பட்டேன், நீ என்னடா காதல் தோல்வியான பின்னாடி இப்படி மாறியிருக்க”
”என் காதல் ஒண்ணும் தோக்கலை, அது அப்படியேதான் இருக்கு”
”அப்புறம் நீயும் ரூபாவும் பிரேக் அப் பண்ணிட்டீங்களே அது”
”பிரேக்அப்ன்னு நான் சொன்னேனா இல்லை அவள் சொன்னாளா சின்ன மிஸ் அண்டர்ஸ்டான்டிங் கோச்சிக்கிட்டு அவள் போனா நானும் வந்துட்டேன், சொல்லப்போனா நான்தான் அவளை லவ் பண்ணேன் ஆனா அவள் முதல்ல இருந்து தெளிவா இருந்தா, அவளுக்கு என் மேல லவ்வெல்லாம் இல்லை, சின்ன க்ரஷ் இருந்தது, அதுவும் இப்ப போயிடுச்சி, அதோடு அவளை விட்டுட்டு வந்துட்டேன், இப்பவும் என் காதலின்னா அது ரூபாதான் வேற யாரும் இல்லை”
”இதப்பாரு நீ ரூபாவை எப்படியெல்லாம் லவ் பண்ணேன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதெப்படி அவளை விட்டுட்டு வரமுடிஞ்சது உன்னால”
”அவள் போயிட்டா என்னை என்ன செய்ய சொல்ற, என்னை நம்பலை, நான் எந்தளவுக்கு உண்மையா நேர்மையா அவள்கிட்ட இருந்தேன், அதை புரிஞ்சிக்காம கிளம்பி போனா நான் என்ன செய்றது“
”நீயும் அவ பின்னாடியே போயிருப்பியே“
”ம்ம்ம் வெட்கத்தை விட்டுட்டு பத்து முறைக்கு மேலயும் அவளை தேடிப் போய் பேசினேன், கெஞ்சினேன், மன்னிப்பு கேட்டேன், வேலைக்கு ஆகலை அதோட நான் விட்டுட்டு வந்துட்டேன்”