(Reading time: 24 - 48 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

“ஓ பாசமா, இருந்ததே கடல் அளவுக்கு ஏன் அதை விட அதிகமாவே உன்மேல பாசத்தை பொழிஞ்சேன், பதிலுக்கு நீ என்ன செய்த அப்பா சாவுக்கு கூட நீ வரலை சே”

   

”ரொம்ப அலுத்துக்காத அந்தாளால யாரு சுகப்பட்டா, அம்மாவாகட்டும் நீயாகட்டும் நான்கூட அந்தாளால கஷ்டம்தான் பட்டேன், இருக்கற நாளெல்லாம் அப்பாவை திட்டிக்கிட்டே அம்மா போய் சேர்ந்துட்டாங்க, அந்தாளு இருந்து இருந்து நம்ம உசுரை வாங்கினான், இப்ப மட்டும் அந்தாளு இருந்திருந்தா நாம நடுத்தெருவில பிச்சைதான் எடுத்திருப்போம்”

   

”இருக்கட்டும் அப்பா சரியில்லை அதனால நம்ம குடும்பம் படாத பாடு பட்டது, நம்ம கஷ்டங்களை பார்த்து அம்மா நோய்வாய்பட்டு இறந்துட்டாங்க எல்லாம் சரி, அதுக்காக பெத்த கடனுக்காக அவர் சாவுக்கு கூட வராம இருப்பியா நீ”

   

”வரபிடிக்கலைக்கா இதோட இந்த விசயத்தை விடறியா சும்மா கடுப்பேத்திக்கிட்டு”

   

”நாளைக்கே நான் செத்துட்டா என் சாவுக்காவது நீ வருவியா இல்லையா” என கேட்டதும் ஆனந்துக்கு வந்ததே கோபம் தன் கையில் இருந்த காபி டம்ளரை ஓங்கி தரையில் வீசியெறிந்தான். அதைக்கண்ட வெங்கடேசன் கூட நடுங்கிப் போனார், ஆனந்திக்கு வியப்பாக இருந்தது

   

”டேய் தம்பி உனக்கு கோபம் கூட வருமா, பச்சைபிள்ளையாட்டம் சூதுவாது அறியாம அப்பாவி போல இருந்த நீயா இப்படி கோபத்தில கொந்தளிக்கற, என்னால நம்ப முடியலை”

   

”என்ன செய்றது காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தானே ஆகனும், நான் மட்டும் என்ன விதிவிலக்கா”

   

”என்னடா இப்படி ஒரேடியா ஆளே மாறிட்ட, பேசறதுக்கு கூட கூலி கேட்ப, அந்தளவுக்கு அமைதியா இருப்ப இப்ப என்னடான்னா டான் டான்னு பதில் பேசற, இது நீதானா இல்லை பேயா வந்திருக்கியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.