”ரூபா மறுபடியும் உன் வாழ்க்கையில வந்தா நீ என்ன செய்வ”
”வந்தா ஏத்துக்குவேன் என்னிக்கிருந்தாலும் ரூபா என் காதலிதான், நான் அவளை காதலிச்ச அளவுக்கு கூட அவள் என்னை காதலிக்கலை அது ஒண்ணுதான் வேதனையா இருக்கு, மத்தபடி அவள் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும்”
”ஓ தியாகி ரேஞ்சுக்கு இறங்கிட்டியா, தாடி ஒண்ணுதான் வைக்கலை அதையும் வைக்கறதுதானே”
”இத்தனை நாளும் தாடியோடதான் அலைஞ்சேன், எத்தனை நாள் அப்படியே இருக்கறது சரி ஊருக்கு வரலாமேன்னு ஒரு எண்ணம் திடீர்ன்னு வந்தது, உன்னை பார்க்கனும்னு தோணிச்சி சரி அப்படியே வந்தா நல்லாயிருக்காதேன்னு நேத்துதான் ஷேவ் பண்ணேன்”
”யதார்த்தவாதிடா நீ எவ்ளோ கஷ்டம் வந்தாலும் உன்னோட நிலையை நீ மாத்திக்கலை, அப்ப எப்படியோ இப்பவும் அப்படியேதான் இருக்க”
”சரி சரி சாவி கொடு நான் கிளம்பறேன்”
”சாவியா எந்த சாவி”
“வீட்டு சாவிக்கா”
”எதுக்குடா தனியா தங்கற இங்க எங்களோட தங்கிடு”
”இங்கயா வேணாம் நான் வீட்டுக்கே போறேன்”
”ஏன் எங்களோட இருந்தா குறைஞ்சா போயிடுவ”
”அக்கா அதிகமா பேசாத நானே மனசு உடைஞ்சிப் போய் கொஞ்ச கொஞ்சமா என்னை நானே தேத்திக்கிட்டு இதுதான் வாழ்க்கை, வாழ்ந்துதான் ஆகனும்னு ஒரு நிலைக்கு வந்து