ஆனாலும் வீணாவும், கீதாவும் சொல்வதுப் போல சஞ்சீவின் அன்பின் வெளிப்பாடாக அது இருக்க கூடாதா என்ற ஏக்கமும் அவளையும் மீறி அவளுள் தோன்றியது! சஞ்சீவிற்கு அவள் மீது இருக்கும் கோபத்தை அவளால் அவனின் பல நடவடிக்கைகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிந்தது! ஆனால், சேலைக் கடையில் பார்த்த அந்த ஒருப் பார்வை தவிர சஞ்சீவிடம் இருந்து பழைய சஞ்சீவின் அன்பிற்கான ‘ஹின்ட்’ எதுவும் வராமலே இருப்பது தான் அவளின் மனதை காயப் படுத்திக் கொண்டிருந்தது!
திருமண மேடையில் சஞ்சீவின் அருகே அமர்ந்தப் போது அவளுள் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை அவளால் விவரிக்க கூட முடியாது! அதுப் போன்ற உணர்வை அவள் என்றுமே உணர்ந்ததில்லை! சடங்குகளின் நடுவே சஞ்சீவ் அவள் மீது உரசுவதுப் போல அருகே அமர்ந்தப் போது அவளுள் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது நிஜம்! ஆனால், தாலி அணிவித்தவனின் முகத்தை பார்த்தப் போது அவளுள் ஏமாற்றம் தான் ஏற்பட்டது! அவனின் முகம் கல் போல இருந்தது என்றால், விழிகள் எந்த உணர்ச்சியும் இல்லாது வெறுமையாக இருந்தது!
பழைய கலகல + துறுதுறு சஞ்சீவை மீண்டும் பார்ப்பது எப்படி? சஞ்சீவ் உண்மையாகவே அவளை முழுவதுமாக வெறுத்து விட்டானா???
மீண்டும் கேள்விகள் கேள்விகள் கேள்விகள்! பதில் கண்டுப்பிடிக்கும் வழி தான் புரியவில்லை! அவளையும் மீறி ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது!
ஒருவழியாக கேலி, கிண்டல், அலங்காரம் எல்லாம் முடிந்து, இந்து சஞ்சீவின் அறைக்கு செல்ல இரவு வெகு நேரமானது! அறையினுள் வந்து பார்த்தவளை சினிமாவில் வருவது போல் வரவேற்க அவளின் கணவன் காத்துக் கொண்டிருக்கவில்லை!
சஞ்சீவ் எங்கே இருக்கிறான் என்பதே அவளுக்கு புலப் படவில்லை. அவள் நின்ற இடத்தின் நேரே பெரிய ஆடம்பர ஷோஃபா ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் அழகிய வேலைப்பாடுகளுடனான மாடர்ன் ஸ்டான்ட் ஒன்று இருந்தது. அதன் மேல் அடுக்கில் அலங்காரப் பொருட்கள் இருந்தது. கீழ் அடுக்குகளில் சில மேகசின்கள் இருந்தது. விழிகளை சுழற்றியவள் இரண்டுப் பக்கமும் இரு கதவுகள் இருப்பதை யோசனையுடன் கவனித்தாள்.