கேட்கனும்னா நாளைக்கு ஆபீஸ் டைம்ல கேளுங்க சார், இது போல ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாடி என்னை கூப்பிடாதீங்க தாங்க்யூ சார்” என கடகடவென சொல்லிவிட்டு அவள் சென்றுவிட ஆனந்திற்கு வியப்பாகவும் சந்தேகமாகவும் இருந்தது
ரோஜா சென்றபின் செல்லப்பா சட்டென அறைக்குள் நுழைந்தார்
”சார் என்னாச்சி சார்” என கேட்க ஆனந்த் திடுக்கிட்டான்
”உங்களை நான் கூப்பிடவேயில்லையே ஏன் வந்தீங்க ஆமா ஆபீஸ் டைம் முடிஞ்சிடுச்சி இன்னும் இங்க என்ன செய்றீங்க”
”இல்லை சார் ஆபீஸ்ல இருக்கற எல்லாரையும் கூபபிட்டு பேசறீங்க, என்னை இன்னும் நீங்க கூப்பிடவேயில்லை, ஒருவேளை என்னை மறந்துட்டீங்களோன்னு நினைச்சி நான் வந்தேன்”
”உங்களை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அதனால நான் உங்களை கூப்பிடலை, என் மாமா வேலைக்கு சேர்த்த ஆளுங்களைதான் நான் கூப்பிட்டு விசாரிச்சேன்“
”என்ன விசாரிச்சீங்க சார்”
“சும்மா பேசினேன், ஆபீஸ் எப்படி நடக்குதுன்னு கேட்டேன், ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொன்னாங்க, அதை எல்லாம் டிப்ஸ் போல மனசுல பதிய வைச்சிக்கிட்டு இருந்தேன்”
”ஆமா ரோஜா என்ன சொன்னா சார் அப்படியே உங்களை பார்த்ததும் வழிஞ்சிருப்பாளே”
”என்னது”
”ஆளை மயக்கற மாதிரி பேசியிருப்பாளே சார்”
என கேட்க அவனோ அதிர்ந்தான், அவளோ நேருக்கு நேராக படபடவென பேசிவிட்டு