(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

சென்றாள், அவளிடம் பேசியதில் வைத்து அவளிடம் ஒரு நேர்மையிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட நேரம் செல்லப்பா இப்படி பேசவும் அதிர்ந்தான்

   

”அப்படியெல்லாம் இல்லையே” என தடுமாறி பதில் அளித்தான் ஆனந்த், அதைக் கண்டு செல்லப்பா நக்கலாகச் சிரித்து

   

”தெரியும் சார் அவள் உங்களையும் மயக்கிட்டாளா”

   

”சே சே இல்லை”

   

”சரி சரி விடுங்க சார் பெரிய இடத்து விவகாரம், நான் தலையிடலை ஆனா, கவனம் சார் உங்க மாமாவை போல நீங்க மொத்தமா அவள் வலையில விழுந்துடாதீங்க, இப்பவே ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கறா உங்களை ஏமாத்தி ஆபீசில பாதி ஷேரோ இல்லை பார்ட்னர்ஷிப்போ வாங்கிடப் போறா”

   

”செல்லப்பா வாரத்தையை அளந்து பேசுங்க, நான் ஒண்ணும் பொம்பளை பொறுக்கியில்லை”

   

“அய்யோ நான் அப்படி சொல்லலை சார்“

   

”போதும் நீங்க கிளம்பலாம்” என சொல்ல செல்லப்பா புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட ஆனந்திற்கு தலையே வலித்தது.

   

தலைவலியுடன் வீடு திரும்பினான், வெங்கடேசன் சொன்னதிற்காக ஆனந்தியிடம் சென்றான் அவளோ அவனுக்காக விதவிதமாக சமைத்து வைத்திருந்தாள், குழப்பத்துடன் வந்திருந்த ஆனந்தைக் கண்டு கலகலவெனச் சிரித்தாள்

   

”என்னக்கா சிரிக்கற”

   

“உன் மாமா கூட இப்படிதான் வேலைக்கு போறப்ப சந்தோஷமா போவாரு, திரும்பி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.