தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 03 - சசிரேகா
மறுநாள் திங்கள் கிழமையில் இருந்து ஆனந்த் ஆபீசுக்குச் சென்றான். அவன் எப்போது வருவான் என வெங்கடேசனும் செல்லப்பாவும் காத்துக்கிடந்தார்கள், ஒருவழியாக அவன் வரவும் இருவருக்குமே நிம்மதியாகிப் போனது
”என்ன மாமா வாசல்லயே நிக்கறீங்க“
”நீ வருவியோ மாட்டியோன்னு சந்தேகம், இன்னும் 10 நிமிஷம் ஆகியும் நீ வராம இருந்திருந்தா ஆனந்தியை விட்டு உன்னை இழுத்துக்கிட்டு வர சொல்லலாம்னு இருந்தேன், அந்த வேலையை நீ மிச்சம் பண்ணிட்ட”
”மாமா அதான் நான் வந்துட்டேன்ல அப்புறம் என்ன”
”சரி சரி வா உன்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைச்சிட்டு நான் கிளம்பறேன்”
”கிளம்பறீங்களா எங்க“
”நான்தான் சொன்னேனே மீட்டிங் இருக்கு வெளியூர் போகனும்னு மறந்துட்டியா”
”ஓ அதுவா சரி சரி நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலையில்லாம போய் வாங்க மாமா” என சொல்லியவன் செல்லப்பாவை பார்த்து சினேகமாக சிரிக்க அவரும் பதிலுக்கு சிரிக்க
”செல்லப்பா சார் எப்படியிருக்கீங்க ஆளே மாறிட்டீங்களே, ஆரம்பத்தில காத்தடிச்சா பறக்கற மாதிரி உருவத்தை வைச்சிருந்தீங்க இப்ப 2 ஆள் போல இருக்கீங்களே”
என சொல்ல செல்லப்பா வெட்கப்பட்டு பதில் சொல்ல முடியாமல் திணற அதைக்கண்ட வெங்கியோ சட்டென அவனை அழைத்துக் கொண்டு ஆபீசில் இருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அனைவரையும் நன்றாக பார்த்தபடி வந்தான் ஆனந்த். அதில் ரோஜாவோ க்ளீனிங் வேலையில் இருந்தாள், அதைக்கண்டதும் முகம் சுளித்தான்
”இவள் இங்கதான் வேலை செய்றாளா” என யதார்த்தமாக கேட்க அதற்கு செல்லப்பாவோ