”என்ன இந்தாளுவோட பேச்சே வித்தியாசமா இருக்கு, நம்மளை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் ஆனந்த் சார்கிட்ட சொல்லி வைச்சிட்டான் போல இருக்கே, இப்ப என்ன செய்றது வெங்கி சார் வேற மீட்டிங் இருக்குன்னு வெளியூர் போயிருக்காரு, சரி அவர் வர வரைக்கும் எப்படியாவது சமாளிக்கலாம், ஒருவேளை கூப்பிட்டு கேட்டா என்ன செய்றது பார்த்துக்கலாம் செல்லப்பா சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு கேட்கற ஆளா இருந்தா அவரை ஈசியா கையாளலாம்” என நினைத்தபடியே வேலையில் மூழ்கினாள்.
ஆனந்தின் கேபினுக்குள் அக்கவுண்டன்டுடன் செல்லப்பா இருக்க ஆனந்த் அக்கவுண்ட்டிடம்
”சம்பள லிஸ்ட் கொடுங்க செக் பண்ணனும்”
“சாரி சார் அதை மட்டும் வெங்கடேசன் சார்தான் பார்ப்பாரு, எனக்கு அதை தரமாட்டாரு செக்தான் தருவாரு சார்”
”அப்போ லிஸ்ட் எங்க இருக்கும்”
”அவர்கிட்டதான் சார் இருக்கும்” என அக்கவுண்டன்ட் சொல்ல உடனே செல்லப்பாவோ
”அது உங்க மாமா ரூம்ல இருக்கற பீரோல இருக்கு சார் ஒரு முறை அவர் அதை வைக்கறப்ப பார்த்தேன்”
”ஆனா மாமா ஊர்ல இல்லாத சமயம் அவர் பீரோல எப்படி கை வைக்கறது“
”சார் இப்படியெல்லாம் யோசிச்சி நீங்களும் ஏமாந்துடாதீங்க, இது உங்க ஆபீஸ் உங்களுக்கு இல்லாத உரிமையா” என சொல்ல உடனே ஆனந்த் செல்லப்பாவிடம்
”நீங்க போய் அந்த லிஸ்ட்டை கொண்டு வாங்க” என சொல்ல செல்லப்பாவும் குதூகலமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
செல்லப்பா உற்சாகமாக வருவதைக் கண்டு சந்தேகித்த ரோஜாவோ அவர் என்ன