”ஆமாம் சார் சரியான ராங்கி”
”ஆமாமாம் நானும் நேத்து இவளை பார்த்தேன், நடுரோட்டுன்னு கூட பார்க்காம 4 ஆம்பளைங்க முன்னாடி பஜாரி போல கத்திக்கிட்டு இருந்தா”
”அவள் அப்படித்தான் சார் இங்கயும் அவள் பஜாரி மாதிரிதான் நடந்துக்குவா” என செல்லப்பா சொல்லவும் ஆனந்த் வெங்கியிடம்
”ஏன் மாமா உங்களுக்கு என்ன வேலைக்கு ஆளா இல்லை, போயும் போயும் இந்த ராங்கிகாரியை வேலைக்கு வைச்சிருக்கீங்க இவளை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்கலை, முதல்ல இவளை விரட்டுங்க மாமா” என சொல்ல அதிர்ந்தான் வெங்கி
”ஆனந்த் நம்மகிட்ட வேலை செய்றவங்க எல்லாரும் விசுவாசமானவங்க, அவங்களுக்கு நாம மரியாதை கொடுக்கனும் அதைவிட்டுட்டு இப்படி பேசற”
”அய்யோ மாமா அவள் இங்க வேலை செய்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை மாமா”
”இதப்பாரு நீயே இன்னிக்குதான் ஆபீசுக்கு வந்திருக்க, அதனால உனக்கு எதுவும் தெரியாது, யாரை பத்தியும் புரிஞ்சிக்காம ஏதேதோ பேசி வைக்கற, ஒரு வாரம் போகட்டும் அதுக்குள்ள உனக்கு ஓரளவுக்காவது அனுபவம் வரும் அப்ப பாரு, நீ வேணாம்னு நினைக்கறவங்க கூடதான் நீ வேலை செய்ய முடியும்”
”என்னென்னவோ சொல்றீங்க சரி சரி என் கேபின் எங்க நான் போகனும்“
என சொல்ல செல்லப்பா உட்புகுந்து
”வாங்க சார் நான் உங்களை கூட்டிட்டு போயிடறேன்” என சொல்லி கையோடு ஆனந்ததை அழைத்துக் கொண்டு அவனுக்கென ஒதுக்கிய கேபினுக்குள் விட்டவன் கதவை சாத்திவிட்டு ஆனந்திடம் ரோஜாவை பற்றி இல்லாதது பொல்லாதது என எப்படியாவது