(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

செய்கிறார் என தெரிந்துக் கொள்ள அவருக்கே தெரியாமல் பின் தொடர்ந்தாள்.

   

செல்லப்பா வெங்கடேசன் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோவை திறக்க ஒளிந்திருந்த ரோஜாவிற்கு திக்கென்றது, பீரோவை திறந்து சம்பள லிஸ்ட்டை எடுத்துவன் அதோடு செல்லாமல் அந்த பீரோவை அலசி ஆராய்ந்தான்

   

”இந்தாளு ஏன் இப்படி செய்றாரு என்ன வேணுமாம் அவருக்கு” என நினைத்தபடியே அவரிடம் சென்றாள்.

   

”என்ன சார் இங்க வேலை உங்களுக்கு” என கேட்க அதிர்ந்து போய் அவளைப் பார்த்த செல்லப்பாவோ

   

”ஆனந்த் சார் ஃபைலை கொண்டு வரச் சொன்னாரு”

   

”ஃபைல்தான் கிடைச்சிடுச்சில்லை பின்ன எதுக்காக மத்ததை ஆராயறீங்க”

   

”ஏதாவது முக்கியமான விசயம் இருந்தா அதை உடனே ஆனந்த் சார் கிட்ட காட்டலாம்னுதான்”

   

என சொல்ல அவளோ அந்த ஃபைலை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு அந்த பீரோவை பூட்டி சாவியை தன்வசம் வைத்துக் கொண்டவள்

   

”எனக்கு ஐம்பதாயிரம் சம்பளம் தராங்க அது உங்களால ஏத்துக்க முடியலை, ஆனந்த் சார்கிட்ட சொன்னாலும் எதுவும் மாறாது” என உறுதியாக சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட செல்லப்பா வெகுண்டான்

   

நேராக நடந்ததை அப்படியே ஆனந்திடம் சொல்லி

   

”அவளுக்கு இருக்கற திமிரை பார்த்தீங்களா உங்க மாமா கொடுத்த இடம்தான் இது எப்படி ஆட்டம் போடறாள்னு பாருங்க சார்” என செல்லப்பா கொந்தளிக்க ஆனந்திற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.