(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”இல்லைக்கா சும்மாதான் உனக்கு அவளை பத்தி தெரியுமான்னு கேட்டேன், அவ்ளோதான் அப்புறம் மாமா உன்கிட்ட பேசறப்ப நான் இப்ப பேசினதை பத்தி சொல்லி வைக்காத”

   

”ஏன்டா”

   

”ஆபீஸ்ல நிறைய குளறுபடி நடக்குதுக்கா அதை ஒண்ணு ஒண்ணானா நான் பார்த்துக்கிட்டிருக்கேன், மாமா வேற மீட்டிங் விசயமா வெளியூர் போயிருக்காரு நீ பாட்டுக்கு எதையாவது சொல்லி அவர் உடனே இங்க கிளம்பி வந்துட்டா என் வேலையெல்லாம் கெடும்“

   

”இதப்பாரு ஆனந்த் அவர் மேல சந்தேப்படற வேலையே வைச்சிக்காத அவர் ஆபீஸை நல்லபடியா நடத்தறாரு”

   

”அக்கா அவர் நல்லவருதான் அவர் ஆபீசை நல்லாதான் நடத்தறாரு ஆனா, இங்க இருக்கற சிலர் அவருக்கு தெரியாம சில குளறுபடிகள் செய்றாங்க அக்கா அதைச் சொன்னேன்”

   

”யாரை சொல்ற அந்த செல்லப்பாவையா, இதப்பாருடா அந்த செல்லப்பாவோட சேராத அந்தாளு பொய் பித்தலாட்டம் செய்றவன் அவனை நம்பிடாதடா“

   

”என்னக்கா இப்படி பேசற”

   

”உன் மாமா அந்த செல்லப்பாவை பத்தி நிறைய விசயம் சொல்லியிருக்காரு, அந்தாளு சரியில்லை வேலையை விட்டு எடுக்கலாம்னா ஆபீஸ் ரகசியம் எல்லாம் அந்தாளு தெரிஞ்சி வைச்சிருக்கானாம், அந்தாளை விரட்டிட்டா அப்புறம் அந்தாளு வேற கம்பெனியில போய் நம்மளோட ரகசியத்தை சொல்லிட்டா அது நமக்கு பெரிய நஷ்டமாயிடும், வேற வழியில்லாம அந்தாளை நான் வேலையில வைச்சிருக்கேன் ஆனாலும் அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இருக்கேன்னு சொல்வாருடா எதுக்கும் நீயும் அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இரு புரியுதா” என சொல்ல ஆனந்த் குழம்பியேவிட்டான்

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.