(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”அவர் மட்டும் தனியா போறதில்லை ரோஜாவையும் கூட்டிட்டுப் போவாரு சார்” என சொல்ல ஆனந்தின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது

   

”பணக்காரங்க இருக்கற க்ளப்புக்கு எதுக்கு ரோஜாவை கூட்டிட்டுப் போகனும், நீங்களே சொல்லுங்க சார் அது தப்புதானே”

   

”தப்புதான் இது உண்மையிலயே வலுவான காரணம் ம்ம் ஆமா நாளைக்கு செவ்வாய்கிழமையாச்சே, மாமா வேற வெளியூர் போயிருக்காரு அப்ப நாளைக்கு யாரு க்ளப்புக்கு போவாங்க”

   

”சார் வெங்கடேசன் சார் இல்லாத சமயத்தில அவர் சார்பா அந்த ரோஜாதான் போய் வருவா, இந்த முறை நீங்க வந்திருக்கீங்கள்ல நீங்க போய் வாங்க சார், அங்க போனதானே தெரியும் ரோஜாவை பத்தின இன்னொரு முகம் எனக்கு இந்த ஆபிஸ் வரைக்கும்தான் சார் தெரியும், இன்னும் அவள் என்னென்ன எங்கெங்க கைங்கரியம் செய்து வைச்சிருக்காள்ன்னு யாருக்குத்  தெரியும்” என சொல்ல ஆனந்த் பலமாக யோசிக்கலானான்

   

”என்ன சார் இப்படி யோசிக்கறீங்க”

   

”மாமா இவ்ளோ தைரியமா க்ளப்புக்கு ரோஜாவை கூட்டிட்டுப் போறார்னா கண்டிப்பா இது விசயமா என் அக்காவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குமோ”

   

”அட என்ன சார் ரோஜாவோட இருக்கற விசயம் எப்படி உங்க அக்காவுக்கு தெரியப் போகுது”

   

”இருங்க செல்லப்பா நான் கன்பார்ம் செய்துக்கிறேன்” என சொல்லியவன் உடனே ஆனந்திக்கு போன் செய்தான்

   

”ஹலோ அக்கா என்னக்கா செய்ற”

   

”டிவியில சீரியல் பார்க்கிறேன் சொல்லுடா என்ன விசயம் ஆபீசுக்கு போயிருக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.