”சரிக்கா சரிக்கா வேலையிருக்கு அப்புறம் பேசறேன்” என சொல்லி போனை கட் செய்துவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டான்
”சார் என்னாச்சி சார் உங்க அக்கா என்ன சொன்னாங்க சார், ரோஜாவை பத்தி தப்பு தப்பா சொன்னாங்களா”
”இல்லை செல்லப்பா, ரோஜாவா? யாருன்னு கேட்டாங்க“
”ஓ பார்த்தீங்களா சார் உங்க மாமா உங்க அக்காவுக்கே தெரியாம ரோஜாவை மெயின்டெயின் பண்றாருன்னு” என சொல்ல அவனுக்கு எரிச்சலாக இருந்தது
”செல்லப்பா போதும் என்ன இருந்தாலும் அவர் என் மாமா, அவர் நல்லவரு, நியாயமானவரு, அவர் ஒண்ணும் பொம்பளை பொறுக்கியில்லை, ரோஜா விசயத்தில சலனப்படற அளவுக்கு ஏதோ ஒரு விசயம் நடந்திருக்கு, அதை கூடியசீக்கிரம் நான் கண்டுபிடிக்கிறேன் தப்பு ரோஜா மேல இருந்தா அவளை நானே விரட்டறேன்”
”சூப்பர் சார் சூப்பர் சார் அதையே செய்ங்க சார்“
”நீங்க போய் உங்க வேலையை பாருங்க” என சொல்ல செல்லப்பா குதூகலமாக தன் வேலையை செய்ய கிளம்பினார். அவர் சென்றதும் அவர் தந்த ஃபைலை பிரித்துப் பார்த்தான், மாதாமாதம் அங்கு வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு பணம் சம்பளமாக தரப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்கள் இருந்தது அதை கவனமாக பார்த்தபடி வந்தவன் ரோஜா பெயருக்கு நேராக ஐம்பதாயிரம் சம்பளம் என இருக்கவே அதிர்ந்தான்
”மாமா தப்பு செய்றாரா இல்லை என் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒண்ணு இங்க நடக்குதா இதை பத்தி எப்படி தெரிஞ்சிக்கறது” என பலமாக யோசித்த நேரம் அவனுக்கு போன் வர என்னவென பார்த்தான் வெங்கடேசன்தான் போன் செய்திருக்க உடனே போனை ஆன் செய்து பேசினான்
”சொல்லுங்க மாமா”