”உள்ளே வரலாமா”
”வா” என்றான் அந்த அழைப்பில் இருந்தது வெறுப்புதான்
செல்லப்பா நன்றாகவே தூபம் போட்டு வைத்திருக்கிறார் என நினைத்தபடியே அவள் சென்றாள்.
ஆனந்த் அவளை ஏற இறங்கப் பார்த்தான், மற்றவர்களை இருக்கையில் அமர வைத்தான் ஆனால் அவளை அமர கூட சொல்லவில்லை, நிற்கவைத்தான் மற்றவர்களிடம் ஜாலியாக பேசியவன் இவளிடம் கடுமையாக பேசி வைத்தான் ஆனால் அவளோ தன் முகத்தை சிரித்தபடியே வைத்தக் கொண்டு பதிலளித்தாள்.
”ஆமா உனக்கு இந்த ஆபீசில் என்ன வேலை”
“அதுகூட தெரியாமலா அந்த சீட்ல உட்கார்ந்திருக்கீங்க சார்”
”என்ன நக்கலா கேட்டதுக்கு பதில் சொல்லு”
”க்ளர்க் வேலை சார்“
”அந்த வேலையில என்னென்ன செய்யனும்னு தெரியுமா உனக்கு“
”ஓரளவுக்கு தெரியும் ஆனா, உங்களுக்கு எந்தளவுக்கு க்ளர்க் வேலை பத்தி தெரியும்னு எனக்கு தெரியலையே சார்”
”ஒழுங்கா வேலை செய்றியா இல்லையா”
”செய்யலைன்னா இத்தனை நாள் இங்க வேலையில இருக்க முடியுமா சார்”
”உன்னை பத்தி ஏகப்பட்ட புகார்கள் வருது”