”ஆனந்த் மீட்டிங்கை நாளைக்கு வைச்சிட்டாங்களாம்”
”ஓ”
”என்னால ஊருக்கு வந்து மறுபடியும் இங்க வந்துன்னு அலைய முடியாது அதனால நான் இருந்து அந்த மீட்டிங்கை முடிச்சிட்டு வந்துடறேன்”
”சரிங்க மாமா”
”நாளைக்கு க்ளப்ல மீட்டிங் இருக்கு, நான் வேற அங்க இல்லை“
”நான் வேணா போய் பார்க்கவா”
”ஒண்ணும் வேணாம் அடுத்த வாரம் நானே போய் பார்த்துக்கிறேன் நீ பொறுப்பா ஆபீசை பார்த்துக்க”
”ஏன் மாமா நான் க்ளப்புக்கு போக கூடாதா“
”அங்க எல்லாமே மாறிடுச்சி ஆனந்த், உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது, நான் இருந்திருந்தா கூட உன்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்திருப்பேன், தனியா போய் அங்க இருக்கற சூழல்ல நீ கஷ்டப்படக்கூடாதுன்னு சொன்னேன்“
”ஓ சரி நான் போகலை“
”அப்புறம் ஒரு முக்கியமான விசயம்“
”என்ன மாமா“
”செல்லப்பாகிட்டயிருந்து விலகியே இரு அந்தாளு என்ன சொன்னாலும் நம்பாத“