(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

வரும்போது குழப்பத்தோடவே வருவாரு, இப்ப நீயும் அப்படிதான் வர்ற அப்படி என்னடா நடக்குது அந்த ஆபீசில“

   

”என்னத்த சொல்ல எனக்கு தலையே சுத்துது”

   

”இப்பதானே வநதிருக்க ஆபீஸ் விசயம் புரிய உனக்கு நாள் ஆகும், பார்த்துக்கலாம் சரி சரி வா உனக்காக உனக்கு பிடிச்சதையே சமைச்சி வைச்சிருக்கேன், சாப்பிட்டு நிம்மதியா தூங்கினாலே உன் குழப்பம் போகும்” என சொல்ல ஆனந்தும் சரி சரியென தலையாட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தான் 

   

ஆனந்தி பரிமாற திருப்தியுடன் சாப்பிட்டு முடித்து ஆனந்தியை அவளின் அறையில் படுக்க வைத்தவன்

   

”ஆனந்த்“

   

”என்னக்கா”

   

”உன் மாமாவை சந்தேகப்படாத”

   

”சே சே இல்லைக்கா எனக்கு அவர் மேல சந்தேகம் இல்லை அங்க இருக்கறவங்க மேலதான் சந்தேகம்“

   

”எந்த நிலையிலும் உன் மாமாவை விட்டுக்கொடுத்துடாத, அவர் நமக்காகவே வாழறவரு”

   

”சரிக்கா எனக்கு புரியுது நீ தூங்கு குட்நைட்” என அவளிடம் இதமாக பேசிவிட்டு தனக்கென ஒதுக்கிய அறையில் சென்று படுக்கையில் படுத்தான்.

   

அன்று நாளெல்லாம் நடந்த விசயங்கள் ஒரு முறை அவன் நினைவில் வந்து சென்றது ரோஜாவிடம் பேசியது அவனுக்கு குழப்பத்தை தந்தது, அதை நினைத்தபடியே உறங்கிப் போனான்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.