(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்”

   

”எனக்கு மட்டுமா இந்த ஆபீஸ்ல இருக்கற எல்லாருக்குமே அவளைப் பத்தி நல்லா தெரியும், நான் சொல்றதுல சந்தேகம் இருந்தா எல்லாரையும் கூப்பிட்டு கேளுங்க சார் பாவம் சார் உங்க மாமா அவரை எப்படியாவது அவள்கிட்டயிருந்து காப்பாத்துங்க சார்”

   

”இதை பத்தி நான் மாமாகிட்ட பேசறேன்“

   

”அவசரப்படாதீங்க சார், இதைபத்தி அவர்கிட்ட பேசினா மட்டும் அவர் என்ன உண்மையை ஒத்துக்குவா போறாரு யாருக்கும் தெரியாம செய்த தப்பை இனிமேல தெரிஞ்சே செய்வாரு ஆபீஸ்ல அவளோட பழகறது தாண்டி அவள் வீடு வரைக்கும்ல போய் வராரு”

   

”என்னது வீட்டுக்கு போறாரா”

   

”ஆமாம் சார் ஒரு முறை பர்சனல் விசயமா ரோஜா வீட்டு பக்கம் போக வேண்டி இருந்தது, பார்த்தா வீட்டு முன்னாடி உங்க மாமா கார் நின்னுட்டு இருந்தது எப்பல்லாம் அவர் ரோஜா வீட்டுக்கு போறாரோ அப்பல்லாம் டிரைவரை வைச்சிக்கறதில்லை, அவரே தனியாளா ஓட்டிக்கிட்டு போறாரு சார் அது மட்டுமா அடிக்கடி அக்கவுண்ட்ஸ்ல பணம் குறையும் என்ன ஏதுன்னு பல நாள் கஷ்டப்பட்டு அலசி ஆராய்ந்தபின்னாடிதான் ரோஜாவுக்கு அதிகளவு சம்பளம் போகுதுன்னு தெரியுது சார், நீங்களே சொல்லுங்க ஒரு சாதாரண க்ளர்க்கு எவ்ளோ சம்பளம் தருவாங்க சொல்லுங்க”

   

”மிஞ்சி போனா அனுபவத்தை வைச்சி ஒரு ஏழாயிரத்துக்குள்ள தரலாம்” 

   

”ஆனா ரோஜாவுக்கு மாசாமாசம் ஐம்பதாயிரம் சம்பளம் போகுது சார்”

   

”என்னது” என அதிர்வில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து நின்றான் ஆனந்த். செல்லப்பாவிற்கு ஆனந்தின் அதிர்ச்சி மகிழ்ச்சியை தந்தது

   

”இப்படி பல விசயங்கள் நடக்குது சார், எதுக்காக அவளுக்கு மட்டும் அவ்ளோ சம்பளம் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.