தரனும், நான் எத்தனை வருஷமா இங்க வேலை செய்றேன் எனக்கே இப்பதான் ஐம்பதாயிரம் சம்பளம் தர்றாங்க ஆனா, அவள் இங்க வேலைக்கு வந்து சில மாசங்கள்தான் ஆகுது அதுக்குள்ள ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கறா இதெல்லாம் அநியாயம் சார்“
”செல்லப்பா அக்கவுண்ட்டை கூப்பிடுங்க விசாரிக்கனும்”
”என்ன சார் என் பேச்சுல நம்பிக்கையில்லையா உங்களுக்கு”
”சொன்னதை செய்ங்க” என கட்டளையிட அதில் செல்லப்பாவும் அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
வழியில் ரோஜா வேலை செய்வதைக்கண்டு அவளிடம் வம்படியாக சென்றான் செல்லப்பா
”என்ன ரோஜா ரொம்ப செழிப்பா இருக்க போல“ என இளித்தபடி பேச அவளோ அவனைப் பார்த்து
”நேத்துதான் புதுசெருப்பு வாங்கினேன் நல்லாயிருக்கா இல்லையான்னு பார்த்து சொல்றீங்களா” என நக்கலாக பேச செல்லப்பா கடுப்பானான்
”ஏய் என்ன இளப்பமாவா பேசி வைக்கற, இத்தனை நாளும் வெங்கடேசன் சார் தயவுல ரொம்ப சொகுசா வாழ்ந்துட்டல்ல, இனி அதுபோல நடக்காது ஏன்னா இப்ப ஆனந்த் சார் வந்திருக்காரு, அவர்கிட்ட உன்னோட வித்தையெல்லாம் செல்லாது, கூடிய சீக்கிரம் உன் சீட் கிழியதான் போகுது, இப்பவே அடுத்த வேலையை தேடிக்க”
”உங்க அறிவுரைக்கு ரொம்ப நன்றி இடத்தை காலி பண்றீங்களா காத்து வரலை” என சொல்ல கடுப்பான செல்லப்பா அவளைப் பார்த்து கோபத்தில் உருமியபடியே அக்கவுண்ட்டை காணச் சென்றார்.
அவன் சென்றதும் ரோஜா பலமாக யோசிக்கலானாள்.