பெயர்கள்
சோனா வந்தனா மிருதுளா நந்தினி
சமையல் 100 0 30 100
ஒழுக்கம் 60 10 30 90
சுபாவம் 50 20 10 80
பணிவு 50 30 30 80
புத்திசாலித்தனம் 100 20 0 100
அனுசரித்தல் 60 20 20 80
சகிப்புதன்மை 50 10 30 90
மொத்தம் 700க்கு 470 110 150 620
அந்த அட்டவனையில் தங்களது மதிப்பெண்களைப்பார்த்து 4 பெண்களில் சோனாவும் நந்தினியும் மிகவும் சந்தோஷப்பட்டனர். மீதி இருவரின் முகமும் வாடிவிட்டது.
தாத்தா அந்த மார்க்குகளை எழுதிவிட்டு திரும்பி அவர்களை பார்த்தார்
”இந்த நாள் இதோட முடிஞ்சிடுச்சி. நான் இந்த மாதிரி மார்க் எழுதறதை முதல் நாள்ல இருந்தே வைச்சிருந்தா உங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையாவது வந்திருக்கும் நீங்களும் இந்த போட்டியை போட்டியா நினைச்சி மதிச்சிருப்பீங்க ஆனா நான் செய்யாம போனதுக்கு காரணம் உங்களுக்குள்ள வெறுப்பு வந்துட கூடாதுன்னுதான்.
ஆனா இனிமேல இந்த போர்டு இங்கதான் இருக்கும் உங்களுக்கான மார்க்கும் அந்த நாள் முடிவுல எழுதப்போறேன் மாசம் கடைசி நாள்ல மொத்த மதிப்பெண்களையும் வைச்சி யார் ஜெயிக்கறாங்களோ அவங்களுக்குதான் ரிஷியை கல்யாணம் செய்து வைப்பேன் புரிஞ்சதா
இனிமேலயாவது விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா இருக்கற வழியை பாருங்க போகலாம் போய் தூங்குங்க நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்துடுங்க 7 மணிக்கெல்லாம் நீங்க எல்லாரும் ரெடியாகி என் முன்னாடி இருக்கனும் இப்ப கிளம்புங்க” என சொல்ல அந்த 3 பெண்களும் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட நந்தினி மட்டும் அனைவருக்கும் பால் கொடுத்துவிட்டு ரிஷிக்கும் நட்ஸ் பால் கொடுத்து சிரித்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள். அவளின் அந்த சிரிப்பைக்கண்ட அர்ஜூனுக்கு பக்கென்றது. அவன் மெதுவாக ரிஷியிடம்