(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 15 - சசிரேகா

  

2 நாள் அனைவருமே பயங்கர பிஸி. சரண்யாவை பாடிகார்டுகள் துணையோடு அறையில் பத்திரப்படுத்தினார்கள், தாஸ் எந்நேரமும் தேவாவின் அருகிலேயே இருந்தான்

   

”டேய் அந்த பக்கம் போடா, எப்ப பாரு என்கூடவே இருந்தா எப்படி நாளைக்கு கல்யாணம் ஆனா இப்படியா என்கிட்ட வருவ” என கேட்க அவனுக்கு கோபமே வந்தது. 

   

சட்டென அவ்விடம் விட்டு வேறு பக்கம் சென்றவனுக்கு சுப்ரஜா கண்ணில் பட்டாள். விளையாடிக் கொண்டிருந்தவளிடம் சென்று அவளுடன் விளையாட ஆரம்பித்தான். அதைப்பார்த்த அனைவரும் பாவம் தாஸ் என மனதில் நினைத்து பரிதாபமான பார்வையை அவன் மீது வீசிவிட்டு சென்றார்கள்.

   

சரண்யாவின் தாத்தாவோ கல்யாணத்தைப் பெரிதாக செய்யாமல் சாதாரணமாக ரிஜிஸ்டர் ஆபிசில் செய்தார். இருவரும் மாலை மாற்றி கையெழுத்து போட்டதும் தாலியை கீர்த்தனா தர அதை வாங்கிய தாஸ் அவளையே பார்த்தான். உனக்காகத்தான் என மனதில் நினைத்துக் கொண்டு சரண்யாவை பார்த்தான் அவளோ சிடுசிடுவென இருக்கவே அதை வெகுவாக ரசித்தவன் அவள் கழுத்தில் தாலியை கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

   

திருமணம் அமைதியாக முடிந்த காரணத்தால் விருந்து போஜனம் கூட வைத்தி தாத்தாவின் வீட்டிலேயே ஏற்பாடு செய்தார்கள். தேவாவோ தாஸை தேட அவனோ ஒரு மூலையில் நின்றிருந்தான். 

   

”தாஸ் என்னடா இங்க நிக்கற இன்னிக்கு நைட் உனக்கு முதலிரவு, நான் உன் ரூமை அலங்காரம் செய்யட்டுமா” என நக்கலாகக் கேட்க அவனோ வெறுப்பாக பார்த்தான்

   

”கல்யாணம் ஆயிடுச்சி அப்புறம் என்ன, அவள்தான் உன் பொண்டாட்டி, அதை மனசுல பதிய வைச்சிக்க தாஸ், அவளுக்கு நீ அடிமையாயிடாத, அவளோட திமிர் போயிட்டா அதுக்கப்புறம் அவள் சாதாரணமாயிடுவா, அவளும் நல்ல பொண்ணுதான் வசதி வாய்ப்பால கொஞ்சம் திமிரா இருக்கா, அவளோட நல்ல குணங்களை பாரு உனக்கு அவளை பிடிக்கும்” என சொல்ல அவனோ நொந்துக் கொண்டே தலையை நிதானமாக ஆட்டவும் தேவாவுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.