சிரித்துக் கொண்டே அவளுடன் ஐக்கியமானான்.
மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த தேவாவும் கீர்த்தனாவும் கதவை தட்ட சரண்யா வந்து கதவைத் திறந்தாள். அவளைக் கண்டதும் தேவா வியந்தான்
“அடேங்கப்பா காலையில சீக்கிரமா எழுந்துட்ட சூப்பரா ரெடியாயிருக்கியேம்மா கலக்கற” என அவன் பேச அவளோ
”அடுத்தவன் பொண்டாட்டியை பார்க்கறதே தப்பு, அதுல இப்படி வர்ணிக்கனுமா அதுவும் பக்கத்தில சொந்த பொண்டாட்டியை வைச்சக்கிட்டு அசிங்கமாயில்லை உனக்கு” என சரண்யா பேசவும் தேவாவுக்கு கஷ்டமாகிப் போனது.
”சாரி” என அதை மட்டும் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாஸைப் பார்த்தவன்
”என்னடா தாஸ் எப்படியிருக்க” என கேட்க அவனோ முறைத்துவிட்டு சாப்பிட அவனோ
”என்னடா ஆச்சி ஏன் ஒரு மாதிரியாயிருக்க” என அவனது தோளை தொட அவனோ தள்ளிவிட்டான்.
”என்னாச்சி கோபமா என் மேலயா” என கேட்க அவனோ ஏதோ சைகை செய்தான். அதைப் பார்த்தவனுக்கு திக்கென்றது. கீர்த்தனாவோ
”அண்ணா என்ன சொல்றாருங்க” என தேவாவிடம் கேட்க
”என் பொண்டாட்டிக்கிட்ட பேசற வேலையை வைச்சிக்காதங்கறான், அவள்ட்ட இருந்து என்னை தள்ளி நில்லுங்கறான்” என சொல்ல
”ஆனா நீங்க ஒண்ணும் தப்பா பேசலையே”
”ஒரு நாள் நைட்ல என்ன நடந்துச்சின்னு தெரியலையே, இவன் மாறினானா இல்லை