அவள் மாத்திட்டாளோ என்னவோ நடக்குது தாஸ் சரியில்லை” என தேவா தனக்குள் நினைத்துக் கொண்டே தாஸிடம்
”சரி வாடா வேலைக்கு போலாம்” என கூப்பிட அவனோ எங்கு என கேட்க
”வீடு கட்ட வேணாமா” என கேட்க
அவனோ
”அது உன் வீடு, அதை நீ கட்டிக்க, நான் ஹாஸ்டல் கட்டப் போறேன்” என சொல்ல அவன் சிரித்தான்
”ஓ பெரியாளாயிட்டியா சரி சரி நானும் வரேன், தனியா உன்னால அங்க வேலை செய்ய முடியாது” என சொல்ல அவனோ
”என் பொண்டாட்டி இருக்கா, நீ வேணாம் எனக்கு” என சைகை செய்ய முதலில் மனதளவில் வேதனைப்பட்ட தேவா தாஸ் சந்தோஷமாக இருக்கட்டும் என நினைத்த உடனே கலகலவெனச் சிரித்தான்
”சரி சரி உன் விருப்பம் நானும் என் பொண்டாட்டியோட வேலைக்குப் போறேன்” என சொல்லிவிட்டு அவசரமாக கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அவர்கள் சென்றதும் சரண்யா வந்தாள் தாஸிடம் சிரித்துக் கொண்டே அவனுக்குப் பரிமாறிவிட்டவள்
”பார்த்தீங்களா எப்படி பேசறார்னு என்னவோ என் அண்ணன் அவர் என்னை தம்பியாதான் பார்க்கறாருன்னு சொன்னீங்களே, இப்ப பாருங்க அவரோட வீடு கட்ட உங்களை கூப்பிடறாரு அதாவது வேலைக்கு ஆளை தேடறாரு. நீங்க அதை பார்த்துக்கிட்டா அவர் ஜாலியா சுத்தலாம்ல, இப்ப நமக்கே ஹாஸ்டல் கட்டற வேலை இருக்கு, தாத்தா எல்லா பொறுப்பையும் உங்ககிட்ட கொடுத்த விசயம் தெரிஞ்சும் இப்பவும் உங்களை தன்னோட அடிமையா மாத்த முயற்சி செய்றாரு, கவனிச்சீங்களா இதுக்குத்தான் நான் சொன்னேன் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி முன்ன மாதிரியில்லை கீர்த்தனா வரவும் சுயநலமா