நினைத்தவள் அவனிடம் கொஞ்சலாக
”மதியம் சாப்பிட்டு முடிச்சதும் ஹாஸ்டல் இடத்துக்கு போய் வரலாமா” என கேட்க அவனோ சரியென பலமாக தலையாட்டினான். ஆனால் மனதில் குரூரமாக சிரித்துக் கொண்டே சமையலை முடித்தவன் தான் செய்த சாப்பாட்டை அவளுக்கு ஊட்டிவிட அவளோ கண்கலங்கினாள்
”என்ன?” என அவன் சைகையில் கேட்க
”இது போல யாரும் எனக்கு ஊட்டிவிட்டதில்லை அதான்” என்றாள் அதைக்கேட்டு அவள் கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு
அவளிடம் ”இதுபோல உனக்கு யாராவது முத்தம் தந்தாங்களா என சைகையில் கேட்க அவளோ இல்லை என பதில் சொல்ல அவனோ சந்தேகமாகப் பார்த்தான்
”என்ன பார்வை இது சத்தியமா யாரும் முத்தம் தரலை” என சொல்ல அவனோ தேவா என்பது போல் உதடு அசைத்து சைகை செய்ய அவளுக்கு பக்கென்றது
”இல்லை இல்லை அவரும் தரலையே” என்றாள் அவனோ சந்தேகமாக பார்த்துவிட்டு
”எப்படி நம்பறது” என கேட்க அவளோ
”அவர்ட்டயே கேளுங்க அவர் என்னை தொடவேயில்லை”
“அப்ப நீ அவரை ஒரு முறை கூட தொடலை” என கேட்க அவள் இல்லை என தலையாட்ட அவளையே முறைத்தான்
”இல்லை ஒரு முறை கட்டிப்பிடிக்கப் பார்த்தேன் அவர் தடுத்தாரு” என மெதுவாகச் சொல்ல அவன் இன்னும் புருவங்களை சுருக்கி அவளையே முறைத்துப் பார்க்க
”ஒரு முறை அவருக்கு முத்தம் கொடுத்தேன், அதுவும் கன்னத்திலதான் வேற எதுவும்