கூட்டிட்டு இங்க வந்துடு பாவம் அவளால தேவா தாஸ்க்கு நடுவில சண்டை அதிகமாகுது. அவங்களும் வாழனும்ல, இதுல வீடு கட்டனும், ஹாஸ்டல் கட்டனும்னா கஷ்டம். சரண்யா குழந்தையை கலைக்காம இருக்கனும்னா நான் உடனே உயில் எழுதறேன் உயில்படி என் சொத்து மொத்தம் சரண்யாவோட குழந்தைக்கு சேரனும்னு எழுதிடறேன். ஆண் குழந்தைன்னா கார்டியன் பொறுப்பு தாஸ்க்கு, பெண் குழந்தைன்னா கார்டியன் பொறுப்பு சரண்யாவுக்குன்னு எழுதிடறேன் அப்ப வேற வழியில்லை அவள் குழந்தையை கலைக்க மாட்டா நீ என்ன சொல்ற”
“சரியான யோசனைப்பா எப்படியோ தாஸ் சரண்யாவோட வாழாம விரட்டுவான்னு நினைச்சேன். ஆனா என்னை தாத்தாவாக்கிட்டான். இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு நான் இப்பவே ஊருக்கு போய் அவங்களை கூட்டிட்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்னையை விட்டு மதுரைக்கு சென்றவர் அங்கு சரண்யாவையும் தாஸையும் அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
அவர்கள் சென்றதும் கீர்த்தனாவிற்கு நிம்மதி வந்தது
”சரண்யா இந்த 3 மாசத்தில என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க என்னால முடியலை அவள் எப்ப போவாள்ன்னு இருந்திச்சி” என கீர்த்தனா தேவாவின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு சொல்ல
”அவளா போனாதான் திரும்பி வரமாட்டா அதுக்காகதான் நான் இவ்ளோ நாள் பொறுமையா காத்திருந்தேன்”
“ஆனா தாஸ் அண்ணாவும் இப்படி நம்மளை விரோதம் பண்ணிக்குவார்ன்னு நான் நினைக்கலை, அப்படியே சரண்யா பேச்சை கேட்டு அவரும் மாறிட்டாரு”
“அவன் மாறலை நடிக்கறான்.”
“நடிச்சாரா என்ன சொல்றீங்க?” என கேட்க தேவாவோ
”ஆமாம் சரண்யா என்னையும் தாஸையும் பிரிக்க நினைச்சாள். அப்படி பிரிச்சிட்டா இந்த