தவிர வேறு எதையும் நினைக்கவில்லை.
24 மணி நேரமும் அவள் ஆசைப்பட்டபடியே அவளது புருஷன் அவள் கூடவே இருந்ததால் அவளுக்கு இன்னும் சந்தோஷம் வந்தது. குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் தாஸ் சரண்யாவுக்கு செய்த சேவைகள் அனைத்தும் சரண்யாவின் மனதில் தாஸின் மேல் காதல் வரவழைத்தது. அந்த காதலால் தாஸும் மாறினான்.
ஹாஸ்டல் திறப்பு விழாவின் போது இருபக்க குடும்பங்களும் கலந்துக் கொண்டது. தேவாவோ இந்த 3 வருடத்திற்குள் புது வீடு கட்டி அதற்கு தாமரை என பெயர் வைத்ததோடு நில்லாமல் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கும் தாமரை என பெயர் வைத்தான்.
திறப்பு விழாவில் இரு குடும்பம் ஒன்றானது, ஒருவரை ஒருவர் பார்த்து நலம் விசாரித்து பேசினார்கள். அதில் சரண்யா தேவாவிடமும் கீர்த்தனாவிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். தேவா தாஸிடம்
”என்னடா சந்தோஷமா இருக்கியா” என கேட்க அவன் ஆம் என தலையாட்ட
”அதான் சரண்யா மாறிட்டாளே இங்கயே இருந்துடுங்களேன்” என சொல்ல அவனோ முடியாது, தாத்தா பாவம் அவரை நான் பார்த்துக் கொள்வதாக கூற
”ஏன் அவருக்கு உடம்பு சரியில்லையா” என கேட்க தாஸ் ஆம் என தலையாட்டவே
”சரி சரி தூரமா இருந்தாதான் நல்லது கிட்டயிருந்தா என்னிக்கு இருந்தாலும் ஆபத்துதான்,. எப்பவும் போல மெசேஜ் பண்ணுடா நானும் டைம் கிடைக்கறப்பல்லாம் போன் பண்ணி பேசறேன் ஆமா சரண்யா இப்பவும் நம்புறாளா நாம ரெண்டு பேரும் பிரிஞ்சத” என கேட்க அவன் ஆம் என தலையாட்டவும் அந்நேரம் சரண்யா அங்கு வந்தாள்
“என்னங்க வாங்க ரெண்டு குழந்தையையும் என்னால பார்த்துக்க முடியாது வாங்க போலாம்” என அவனை இழுத்துக் கொண்டு செல்ல தேவா சிரித்தான். கீர்த்தனாவோ குழந்தையுடன் அவனிடம் வந்தாள்