”என்னப்பா தாமரையை விடவே மாட்டேங்கறீங்க, வேலைக்கும் போகாம இப்பல்லாம் காலையிலயே வீட்டுக்கு வந்துடறீங்க, தாமரையை தூக்கிட்டு போயிடறீங்க, நைட்தான் கொண்டாந்து வீட்ல விடறீங்க இது நியாயமா, அவளுக்கு எங்க முகம் மறந்து போயிடும் போல இருக்கு” என சொல்ல அவரோ சிரித்தார்
”போடா இவளை பார்க்கறப்ப நிம்மதியா இருக்கு தேவா, நீயும் நம்ம வீட்டுக்கு வந்துடேன்”
“வேணாம்பா நான் வரலை இப்பதான் நிம்மதியா இருக்கு, அதான் ஹாஸ்டல் வேலை முடிஞ்சதே அதை நான் பார்த்துக்கறதாலதானே நீங்க தாமரையை கொண்டு போய் வைச்சிக்கிட்டீங்க. இனிமேல நான் தாமரையை பார்த்துக்கறேன் அவளை கொடுங்க” என கேட்க அவரோ தயங்கினார்
”என்னப்பா யோசிக்கறீங்க என்ன விசயம்”
“இல்லைடா தாமரையை நான் வீட்டுக்கு கொண்டு போறதே பக்கத்து வீட்டு சுந்தரத்துக்காகத்தான். தினமும் அவளை பார்க்கறாரு. இப்ப இப்ப அவர் உடம்பு தேறியிருக்கு. அந்தம்மா போனதில இருந்து உடைஞ்சிப் போயிட்டாரு. இவளை பார்க்கறப்பதான் அவர் நல்லாயிருக்கறதா சொல்றாங்க, அதான் அவருக்காகதான் எத்தனை நாளைக்கு அவர் இருக்கறவரைக்கும்தானே”
”எனக்கும் அந்த விசயம் தெரியும், அதனாலதான் நானும் இத்தனை நாள் அமைதியா இருந்தேன் ஆனா இனிமே வேணாம், அவர் பண்ண துரோகத்தால என் தாத்தாவும் செத்து தாமரையும் செத்து அதை என்னால மறக்க முடியலை, இப்பதான் அவர் உடம்பு தேறிடுச்சே விடுங்க இதையே பழக்கபடுத்தினா பின்னாடி தாமரைக்குதான் கஷ்டம். எனக்கு அவளோட எதிர்காலம்தான் முக்கியம். இந்த ஹாஸ்டல் வேலையில நான் ரொம்ப பிசியாயிட்டேன் வீட்டையும் சரியா கவனிக்க முடியலை. இனிமேலயாவது நான் என் குடும்பத்தோட வாழ ஆசைப்படறேன்பா அதான் தாமரையை கொடுங்க”
என கேட்க அவரும் கொடுத்தார். தாமரையை தூக்கிக் கொண்டு கீர்த்தனாவை அழைத்துக்