”என்னங்க இது இப்பவும் சரண்யா உங்களை விரோதியாவே பார்க்கறா என்னவோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்டாளே”
“விரோதியா பார்க்கலைம்மா, எங்க தாஸை இங்கயே நான் தங்க வைச்சிடுவானோன்னு பயத்தில கூட்டிட்டுப் போறா”
“ஏன் இங்க இருந்தா என்னவாம்”
“இங்க வேணாம் அவள் வேற மாதிரி வளர்ந்தவ, அவள் மாளிகையில அவள் தங்கட்டும் விடு, நமக்குதான் தாமரை இருக்காளே அப்புறம் என்ன வா போலாம்”
“எங்க”
“வீட்டுக்குத்தான்.”
“இப்பதான் பங்க்ஷன் முடிஞ்சிருக்கு உடனே கிளம்பினா எல்லாரும் தப்பா நினைப்பாங்க”
“அதைப்பத்தி உனக்கெதுக்கு எல்லாரும் இருக்காங்க நம்மளை யாரும் தேடமாட்டாங்க, இந்த ஹாஸ்டல் கட்டற வேலையில என்னால சரியாவே உங்களோட இருக்க முடியலை. இனிமேலயாவது நான் உங்க கூட இருக்கப் போறேன், ஹாஸ்டல கட்டினாதால நிறைய பணம் கொடுத்தாரு அப்பா, அது போதும் நமக்கு ட்ரான்ஸ்போர்ட்ல வர்ற வருமானமே போதும், இனிமே நான் உங்ககூடவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ வா ஆமா தாமரை எங்க”
“மாமா கிட்ட இருக்கா, அவர் இப்பல்லாம் தாமரையை தரவே மாட்டேங்கறாரு.” என சொல்ல அவன் சிரித்துக் கொண்டே தன் தந்தையை தேடிச் சென்றான்
கைலாசமோ தேவாவின் குழந்தை தாமரையை கொஞ்சிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கவே சிரித்தான்.