(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“கண்டிப்பா அவள் மாறிடுவா”

   

“எப்படி சொல்ற”

   

“அவள் இப்ப அம்மாவாயிட்டா, குழந்தை பிறக்கவரைக்கும் தாஸ் அண்ணா அவளை விட்டு நகர மாட்டாரு. குழந்தையை அவள் ஏதாவது செஞ்சிட்டா என்னாகிறதுன்னு பயப்படுவாரு. குழந்தை பிறந்துட்டாலே தனியா ஒரு பாசம் வந்துடும் பெண்களுக்கு. அப்ப திமிர் பிடிச்ச பொண்ணு கூட தன் குழந்தைக்காக மாறிடுவாங்க, இதுல சரண்யா பாவம் அம்மா இல்லாம தனியா வளர்ந்த பொண்ணுதானே, தன்னோட நிலைமை தன் குழந்தைக்கு வரக்கூடாதுன்னு அவள் பத்திரமா பார்த்துக்குவா”

   

“அப்படி நடந்தா சந்தோஷம்தான் ஆனா, என்ன தாஸை என்னால பார்க்க முடியாது ஏதோ அடிக்கடி மெசேஜ் அனுப்பறான் அது போதும்” என அவன் பெருமூச்சு விடவே கீர்த்தனாவோ

   

”நமக்கும் குழந்தை பொறந்தா நீங்களும் மாறிடுவீங்க அப்ப உங்களுக்கு தாஸ் அண்ணாவோட தேவையிருக்காது” என அவள் சொல்ல தேவா சிரித்தான்

   

”அப்புறம் ஏன் வெயிட் பண்ணனும் சரண்யா போயிட்டா, இப்ப நிம்மதியா இருக்கு வா வா நானும் அப்பாவாகனும் வா” என அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் தேவா.

   

3 வருடங்கள் கழித்து.

   

சரண்யாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கவே அதிலும் ஒரு ஆண் ஒரு பெண் பிறக்கவே தாத்தா சரிசமமாக சொத்துக்களை பிரித்து எழுதி கார்டியன் பொறுப்பையும் தந்துவிடவே சரண்யாவிற்கு சந்தோஷம் ரெட்டிப்பானது. 

   

குழந்தை பிறந்த பின் அவளது மனதில் இருந்த கெட்ட எண்ணம் அழிந்து தாய்மைக்கு உண்டான அமைதி, அன்பு அவளிடம் பிறந்தது. அவள் தன் குடும்பம், தன் குழந்தைகள் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.