(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நடக்கலை” என அவள் தயக்கமாக சொல்ல அவனோ அதோடு சாப்பிடும் தட்டை ஓரம் கட்டிவிட்டு அவசரமாக அறைக்கு சென்றுவிட அவளுக்கு கஷ்டமாகிப் போனது

   

”சே அவன் கேட்டப்பவே நான் எல்லாம் சொல்லியிருக்கனும், ஒவ்வொன்னா சொல்ல சொல்ல அவன் என்னை நம்பாம போறானே இப்ப நான் என்ன செய்றது இவனை வைச்சித்தான் நான் அந்த தேவாவை பழிவாங்க நினைச்சேன். இப்ப நாம அவனை சமாதானம் செய்யலாம் வேற வழியில்லை” என நினைத்தவள் சாப்பாடு இருந்த தட்டை எடுத்துக் கொண்டு தாஸ் இடம் சென்றாள்

   

அவன் பக்கம் அமர்ந்தவள் 

   

”இந்தாங்க சாப்பிடுங்க” என சொல்ல அவனோ மறுத்தான்.

   

”சத்தியமா சொல்றேன், இவ்ளோதான் ஆச்சி என்னை நம்புங்க சத்தியமா என் அப்பா, தாத்தா மேல சத்தியமா இவ்ளோதான் நடந்துச்சி என்னை நம்புங்க” என சொல்ல அவனோ அவளையே உன்னிப்பாக பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்தான். 

   

”எப்படியோ அவனை சமாதானம் ஆக்கியாச்சி இனி கிளம்பலாம்” என நினைத்து தாஸிடம் செல்ல அவனோ அவளை இழுத்து படுக்க வைத்து உறங்க ஆரம்பிக்க அவளுக்கு கஷ்டமாகிப் போனது. 

   

”இவனை விட்டு தனியா நாம போனாலும் நாம நினைச்ச திட்டம் நடக்காது. அங்க வேலை செய்றவங்க முன்னாடி இவனை அவமானப்படுத்தினா தேவாவுக்கு கோபம் வந்து என்மேல சண்டைக்கு வருவான், அப்ப எனக்காக தாஸ் அவனோட சண்டை போடுவான், ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க நானும் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். தேவாவுக்காகத்தான் தாஸ் இங்க இருக்கான், தாஸ்க்கு தேவா தேவையில்லைன்னு ஆயிட்டா போதும் எப்படியாவது தாஸ்கிட்ட பேசி மொத்த சொத்தையும் தாத்தாகிட்டயிருந்து நம்ம பேருக்கு மாத்திடலாம், அதுக்கப்புறம் இந்த தாஸை விரட்டிடலாம்” என நினைத்துக் கொண்டு அவனுக்கு இணக்கமாக நடந்துக் கொள்ளலானாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.