தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 15 - சசிரேகா
காதல் காதல் காதல் இந்த 3 எழுத்துக்களுக்கும் என்னதான் வலிமையோ, இப்போது அந்த வலிமைக்கே சோதனை நடந்துக் கொண்டிருந்தது, முக்கோண காதல் போல ரூபா ஒருபுறம், ஆனந்த் ஒரு புறம், ரோஜா ஒரு புறம் என ஒரு புதுவிதமான வாழ்க்கை வாழலானார்கள்.
ரூபாவிற்கு அனைத்தும் தெரியும், அவள் தனது வாழ்நாளை எண்ணிக் கொண்டிருந்தாள், அதனால் தனது காதலன் ஆனந்தை தினம்தோறும் காண வேண்டும் என ஆசைக் கொண்டாள்
ரோஜாவோ ரூபாவை ஆனந்த் மறக்கவில்லை, எப்படியாவது ரூபாவை விட அதிகமாக காதலித்து ஆனந்தின் மனதில் தான் அதிக இடம் பிடிக்க வேண்டும் என ஆசைக் கொண்டு முன்பை விட அதிகமாகவே அவனை காதலிக்கலானாள், சின்ன சின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பகிராமல் மனதில் போட்டு அடக்கி அடக்கி உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான், அதனாலயே அவன் நாள்பட நாள்பட நோயாளி போல மாறலானான். என்னதான் விதவிதமான உணவுகள் அன்பாக செய்து ரோஜா அவனுக்கு பரிமாறினாலும் அந்த உணவு பேருக்கு உண்டானே தவிர அதனால் அவனது உடல் வலுவாக வில்லை அதுவே ரோஜாவிற்கு பலத்த கவலையாக இருந்தது
இதில் ஆனந்தியின் குழந்தை வயிற்றில் நல்லபடியாக வளரத் தொடங்கியது, அவளை