அதற்குள் அவர்கள் இருவரையும் போட்டோ எடுக்க என்று தனியாக அழைத்து சென்று போட்டோ எடுக்க ஆரம்பித்தார் போடோக்ராப்பர்.
ஆனால் சிறிது நேரத்திற்குள் ஜோதி, சந்துரு, பாலு, பவித்ரா, இளவரசனின் நண்பர்கள் என்று எல்லோரும் அங்கு சென்று விட்டனர்.
விதவிதமான போஸ்களில் அவர்களை போட்டோ எடுக்க, சுற்றி நின்றுக் கொண்டிருந்தவர்கள் நிறைய போஸ்களை சொல்லிக் கொடுத்து இனியாவை வெட்கத்தில் மூழ்க வைத்தனர்.
இளவரசனின் நண்பன் ஒருவர் அவனிடம் ரோஜா ஒன்றை நீட்டி இனியாவை ப்ரோபோஸ் செய்ய சொல்லி அப்படி ஒரு போட்டோவை எடுக்க சொன்னான் போடோக்ராப்பரிடம்.
இனியாவோ வேண்டாம் என்பதாய் தலை அசைக்க இளவரசனும் மறுத்து பார்த்தான்.
ஆனால் சுற்றி இருந்தவர்கள் விடாததால் அவன் ரோஜாவை வாங்கி அவளிடம் நீட்ட, எல்லோரும் “இப்படி இல்ல” என்று கத்தினர்.
அவனும் இனியாவை பார்த்து ‘நான் என்ன பண்றது’ என்றவாறு கண் சிமிட்டி, மண்டியிட்டவாறு அவளிடம் ரோஜாவை நீட்ட அவளும் பெற்றுக் கொள்ள போட்டோ எடுத்தனர்.
பின்பு இளவரசன் சந்துருவின் காதில் ஏதோ சொல்ல அவனும் எங்கோ சென்றான்.
சிறிது நேரத்தில் ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
“எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் தவழ்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்”
என்று பாடல் பாக்ரவுண்டில் ஒலிக்க இளவரசன் அவன் கையில் இருந்த பிளாட்டினம் ரிங்கை எடுத்து இனியாவின் கையில் போட்டான்.
ஜோதி அவள் கையில் ஒரு ரிங்கை கொடுக்க அவள் இளவரசன் கையில் போட்டாள்.
அந்த பாடலும் அவனின் பார்வையும் சேர்ந்து அவளை என்னவோ செய்தது.
அவளின் அந்த நிலையையும் சேர்த்து போட்டோ விழுங்கிக் கொண்டிருந்தது.
கடைசியாக அவர்கள் உறங்க செல்லும் போது மணி பண்ணிரண்டு ஆகி இருந்தது.
எவ்வளவோ நேரம் நின்றுக் கொண்டிருந்த டயர்ட் இருந்தாலும் உறங்க மட்டும் முடியவில்லை.
இனியா இளவரசனுக்கு போன் செய்தாள்.
“ஏய் என்னடி இந்த நேரத்துல போன் பண்ற, தூங்கலையா நீ”
“இளா. நம்மளுக்கு நாளைக்கு கல்யாணம் இளா. நினைச்சி பாருங்களேன். எவ்வளவு சந்தோசமா இருக்கு இல்ல”
வாய் விட்டு சிரித்தவன் “உனக்கு என்னவோ ஆகிடுச்சி டீ” என்றான்.
“போங்க. ரொம்ப தான். இந்த நாள் நம்மளுக்கு எவ்வளவு ஸ்பெஷல் இல்ல”
“ம்ம்ம். அது உண்மை தான். நம்ம லைப்ல எவ்வளவோ நாள் என்னென்னவோ நடந்திருக்கும், பட் இந்த நாளை மட்டும் நம்மளால மறக்கவே முடியாது”
“ம்ம்ம்”
“சரி டா. இப்பவே லேட் ஆகிடுச்சி, காலைல வேற சீக்கிரம் எழுந்துக்கணும். போய் தூங்கு”
“ம்ம்ம். சரி. ஐ லவ் யூ இளா”
“ஐ லவ் யூ டூ டா.”
உறங்கவே நெடு நேரம் ஆகியது இனியாவிற்கு. காலை நான்கு மணிக்கே ஜோதி அவளை எழுப்ப “இப்ப தானே தூங்கினேன் ம்மா” என்று புலம்பினாள் அவள்.
அவளை எழுப்புவதற்குள் ஒரு வழியாகி விட்டாள்.
இனியாவை எழுப்பி அவளை நலங்கு வைக்க அழைத்து வந்தால், அங்கும் அவள் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்ட லக்ஷ்மி தான் தலையில் அடித்துக் கொண்டார்.
அவளை பார்த்த இளவரசனுக்கு தான் சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரிய விசயமாக போய் விட்டது.
ஒரு வழியாக எல்லா சடங்குகளும் முடிந்து எல்லோரும் ஆசிர்வதிக்க இளவரசன் இனியாவின் கழுத்தில் மங்கள நாணைக் கட்டினான்.
அந்த கணத்தில் அவள் முகத்தை அவன் பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகளை பார்த்துக் கொண்டிருந்தான் இளவரசன்.
மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், கூடவே ஏதோ பொறுப்பு கூடுவதை அவனால் உணர முடிந்தது.
அவர்களுக்கு பேசுவதற்கு தனிமை கிடைத்த போது அவன் அவளிடம் “என்னென்னவோ சம்பிரதாயம் இங்க நடந்துச்சி, நமக்கு புரியாத லாங்குவேஜ்ல என்னென்னவோ மந்திரம் சொன்னாங்க. அதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியலை. பட் நான் இப்ப உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்றேன், ஹஸ்பன்ட்ன்ற பேர்ல உனக்கு பிடிக்காத எதையும் உன்னை செய்ய சொல்லி நான் கம்பெல் பண்ண மாட்டேன். உனக்கு பிடிச்சதை செய்ய உனக்கு எப்பவும் புல் ப்ரீடம் இருக்கும். பாரு நான் ஏதோ உனக்கு ப்ரீடம் தரேன்ற மாதிரி சொல்றேன், இப்படி சொல்றதே தப்பு, இத்தனை வருசமா உனக்கு இருந்த ப்ரீடமை குடுக்க நான் யாரு, பட் நான் அந்த ப்ரீடமை எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அதுக்கு நான் அசுரன்ஸ் தரேன். நான் ஏதாச்சும் தப்பு பண்ணா அதை தட்டிக் கேட்க உனக்கு புல் ரைட்ஸ் இருக்கும். இது எல்லாத்தையும் விட உனக்கே உனக்குன்னு நான் இருக்கேன், உன்னோட எல்லா பீலிங்சையும் ஷேர் பண்ணிக்க. ஓகே” என்றான்.
இனியாவிற்கு எல்லா வித சந்தோசத்திற்கும் அப்பால் ஏதோ கொஞ்சம் மனதை நெருடுவதை போல் இருந்துக் கொண்டு இருந்தது. இப்போது அவன் பேச்சில் அதுவும் மறைந்து போனது.
“தேங்க்ஸ் இளா”
“யூ ஆர் வெல்கம் மேடம்”