காலையில் இளவரசன் விழிக்கும் போது இனியா அவனை ஒட்டியவாறு உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் படம் போல் ஓடியது. நேற்று இரவு அவள் செய்ததை எண்ணி திரும்ப திரும்ப சிரிப்பு வந்தது.
அவனின் சிரிப்பு சத்தத்தில் விழித்த இனியா புன்னகைத்து விட்டு லேசாக கண்ணை திறந்து பார்த்தாள்.
பார்த்த மாத்திரத்தில் அவனை அவ்வளவு நெருக்கத்தில் கண்டு ஒரு நிமிடம் பயந்து துள்ளி எழுந்து அமர்ந்தாள்.
“என்னடீ திமிரா, நான் என்ன பேயா பிசாசா”
“ஹிஹிஹி. குட் மார்னிங்”
“பேட் மார்னிங்”
“ஏன் ப்பா. நீ பண்ண கூத்துக்கு அப்படி தான் சொல்லுவாங்க”
அதற்குள் அவர்களின் கதவு தட்டப் பட இனியா எழுந்து குளிக்க ஓடினாள்.
அன்று நாள் விருந்து அப்படி இப்படி என்று ஜாலியாக போனது.
அன்று மதியம் இனியாவை காணவில்லையே என்று தேடிய இளவரசன் கடைசியாக அவள் அறைக்கு வந்தால், அவள் திரும்ப லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன படம்” என்று கேட்டுக் கொண்டே அவளருகே சென்றான்.
“ட்விலைட்” என்று சொல்லி விட்டு படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளவரசன் இவளை என்ன செய்தால் தகும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அன்று மாலை எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாலு தான் இளவரசனிடம் “எங்க ஹனிமூன் போக போறீங்க” என்று கேட்டான்.
இளவரசன் இனியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “இன்னும் அதெல்லாம் டிசைட் பண்ணலை” என்றான்.
ஜோதி இடையில் புகுந்து “சுவிட்சர்லாந்து போங்களேன்” என்று சொன்னாள்.
“உங்க தங்கச்சியை வச்சிக்கிட்டு போயிட்டாலும்” என்று அடிக்குரலில் கூறினான் இளவரசன்.
இனியா அவனை கிள்ள “ஏண்டி என்னை கிள்ளற” என்று வேறு கேட்டு வைத்தான்.
இனியா அவள் அக்காவை பார்த்து அசடு வழிய, ஜோதி சிரித்தாள்.
ஜோதி திரும்ப “சொல்லுங்க. சுவிட்ஸ் ஓகே வா. டிக்கெட், அப்புறம் அங்க அரேஞ்மன்ட்ஸ் எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்றாள்.
இனியா “அதெல்லாம் அப்புறம் பிளான் பண்ணலாம்க்கா” என்று கூறி சமாளித்து விட்டாள்.
பின்பு அவனிடம் “என்ன இளா. அக்கா இருக்கும் போது ஏதேதோ பேசறீங்க” என்றாள்.
பின்ன என்ன டீ “பர்ஸ்ட் நைட்ல மிட் நைட்ல ஏதோ படத்தை பார்த்து சிரிச்சிட்டு இருக்க, நான் பயந்து போய் எழுந்து பார்த்தா பேய் மாதிரி சிரிச்சி வைக்கற, அதுல அந்த சீன் வேற எனக்கு போட்டு காமிச்சி வெறுப்பேத்தற, நார்மலான டைம்ல கூட சிரிப்பு வந்திருக்கும், எனக்கு நேத்து கொல வெறி தான் வந்துச்சி, இனி இந்த ஜென்மத்துல அந்த சீன் என்னால மறக்க முடியுமா, சரி அதையும் விடு. இன்னைக்கு வீடு முழுக்க உன்னை தேடிட்டு நான் வந்தா, வேம்பயர் படம் பார்த்துட்டு இருக்க, நீ எல்லாம் எங்கடி உருப்பட போற” என்றான் நொந்தவனாக.
அவனை பார்த்து இனியாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
இளவரசனை எல்லோரும் எங்க ஹனிமூன் போக போறீங்க என்று நச்சரிக்க, அவன் இனியாவிடம் அதை கலந்தாலோசித்தான்.
அவன் கேட்ட அந்த கேள்விக்கு எல்லாவற்றிலும் உச்சக்கட்டமாக இனியா தந்த பதிலில் அவன் அதிர்ச்சி அடைந்து விட்டான்.
அடுத்த அத்தியாயத்துடன் முற்றும்!
{kunena_discuss:679}