"அதுவா?ஒண்ணுமில்லைடா...பயந்துட்டியா?"
"ம்..."
"பயப்படாதே."-என்று அவனை அணைத்துக் கொண்டான்.
"ஆதி..."
"ம்..."
"மதுவை பார்க்கணும்."
"எது?எப்படி?"
"எப்படியாவது. "
"சரி....போன் பண்ணி பார்ப்போம்."-என்று போனை அவன் எடுக்கவும்,மதுபாலா உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.
"ராகுல்...."
"ஐ...மது..."-என்று ஓடி சென்று அணைத்துக் கொண்டான்.அவள் குனிந்து ராகுலின் நெற்றியில் முத்தமிட்டாள்.
"சூப்பர்...உங்களுக்கு நடுவுல டெலிபதி கூட இருக்கா?இப்போ தான் அவன் உன்னைப் பார்க்கணும்னு சொன்னான்,நீ வந்துட்ட...நமக்கும் எதாவது கிடைக்குமா?"-என்று கண்ணடித்தான் சரண்.
"ம்....பேராசை..."
"ஓ.கே."
"எப்படி ராகுல் இருக்க?"
"டெல்லியில போர் மது....இங்கே வந்துட்டேன்ல,சூப்பர் தான்.மது எங்கேயாவது வெளியே போகலாமா?"
"இப்போவா?"
"ம்....."
"இப்போ வேணாம்...லேட் ஆயிடுச்சி...நாளைக்குப் போகலாம்."
"நிஜமா?"
"நிஜமா..."
"ஓ.கே.மது." என்று அவள் கன்னத்தில்,இதழ் பதித்தான் ராகுல்.அப்போது சரண்,
"டேய்...இதெல்லாம் ஓவர்டா..."
"போடா! நான் பண்ணுவேன்."-என்று மறுபடியும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.அதைக் கண்ட சரண் ராகுலை துரத்த அங்கே 12 வருடங்களுக்கு முன் புதைத்து வைக்கப்பட்ட மகிழ்ச்சி தடையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது.அதைக் கண்ட அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சாரதா அம்மாளின் புகைப்படம் இனிய புன்னகையை பரிசாய் விடுத்தது.அதுவே,அவர்களுக்கு ஆசீர்வாதமாய் அமைந்தது.
தொடரும்...
{kunena_discuss:722}