அந்நேரம் சரண் ஏதோ கேட்க அவன் அறை கதவை திறந்தான்.அவர்கள் இருந்த கோலத்தை பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவன்.பின்,தன் தலையில் தட்டிக் கொண்டு கதவை சாத்திட்டு விட்டு வந்தான்.
"என்னங்க?என்னாச்சு?"
"ஆ...ஒண்ணுமில்லை அம்மூ!"
"ஏதோ கேட்கணும்னு வந்தீங்க?"
"ம்...கேட்கிற நிலைமையில இல்லை...நீ வா!"
"ஏன் என்னாச்சு?"
"வா அம்மூ!"-என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
"என்னங்க?"
"அது...நினைத்தது எல்லாம் நடந்துடுச்சி அம்மூ!"
"அப்படின்னா?"-ஆதித்யா அவள் காதில் ஏதோ கூறினான்.மதுவின் கண்கள் விரிந்தன.
"நிஜமாவா?"
"ஆமாம்!"
"நம்பவே முடியலைங்க!"
"ம்...என்னால கூட தான் நம்ப முடியலை!"-என்று மதுவின் தோள்களில் கையை போட்டான்.
"ம்...நீங்க நம்பவே வேண்டாம்!தள்ளி போங்க!"
"ஏன்டி?மாமா எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கேன்?எதுவுமே இல்லையா?"
"ம்...இல்லை போங்க!"
"அம்மூ!"
"என்ன கெஞ்சுனாலும் எதுவும் கிடையாது!"
"போடி!"-அவன் முகத்தை திருப்பி கொண்டான்.
"கோவமா?"
"ம்..."
-மது அவனை அணைத்து கொண்டாள்.
"உங்ககிட்ட ஒண்ணு சொல்லட்டா?"
"சொல்லு!"
"ஐ லவ் யூ!"ஆதித்யாவால் இதை நம்ப முடியவில்லை.
"அம்மூ!"
"ஐ லவ் யூ!"
"கூடவே மாமான்னு சேர்த்து சொல்லு பார்ப்போம்!"-என்று கண்ணடித்தான்.
"ஐ லவ் யூ மாமா!"-சரண் அவளை நிமிர்த்தி அவன் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டான்.அனைத்தும் சுக போகமாய் முடிந்தது அல்லவா?இருங்கள்... நிரஞ்சன் என்னவானான்?
பவித்ரா தனிமையில் இருக்கும் போது,
"பவி ஒரு நிமிஷம்!"-அவன் வந்ததும் எழுந்து நின்றாள் பவித்ரா.
"சொல்லுங்க!"
"நான்..அது..."
"என்ன?"
"இது வரைக்கும் நான் தடுமாறினது இல்லை... உன்னை பார்த்ததுல இருந்து தடுமாறமல் இருக்க முடியலை!அதாவது..."
"அதாவது?"
"ஐ லவ் யூ பவி!வாழ்க்கை முழுசும் என் கூட துணையா வருவியா?"-பவித்ரா அதிர்ந்து பார்த்தாள்.
"நான் எதாவது தப்பா பேசிட்டேனா?"
"இத்தனை நாள் சொல்லாம...இப்போ தான் சொல்ல தோணுச்சா உங்களுக்கு?"
"பவி?"
"அப்பாக்கிட்ட வந்து பேசிக்கோங்க!"-என்று அவள் ஓடிவிட்டாள். அடுத்ததாக அவன் வழியும் கிளீயரா??ராகுல்,
ரகு-ஸ்ரேயா,ஆதி-மது இருவரையும் தந்தை தாயாக ஏற்று வாழ்ந்தான்.
என்னுயிரே உனக்காக தங்கள் அனைவர் மனதிலும் நல்ல பொழுதுப் போக்காக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
முற்றும்!
{kunena_discuss:722}