“ஹலோ அத்தான் குட்மானிங்....நீங்க இப்படி லேப்டாப்ப பார்க்கிறமாதிரிதான் வேர்ஸை லுக்விடனும்னு அவசியம் இல்லை....நேருக்கு நேராவே லுக் விடலாம்...உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு....”
“வாங்க வாயாடி மேடம்....குட்மானிங்...இன்னைக்கு முதல் போணி உங்களுக்கு நான்தானா..?”
“ம்....எல்லாம் என் நேரம் ......நல்லெண்ணத்தோட உங்க ரைட்ஸை உங்களுக்கு சொல்லிக் கொடுத்தா...இப்படியா வாயாடிப் பட்டம் கட்டுவீங்க...போங்க உங்க குல்ஸ் கொஞ்ச நேரம் உங்களுக்கு கிடையாது...”
தங்கையை தோளோடு பிடித்து தள்ளிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
“பெனால்டி டைம்....10 மினிட்ஸ்....நோ விசுவலைஷேஷன் ஆஃப் வேர்ஸ்...த டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...”
கதவைப் பூட்டி உட் தாட்பாழிட்டாள்.
“இது என்ன விளையாட்டு மிர்னு...”
“ம்...ஒளிஞ்சு பிடிச்சு....அந்த மெயிலை நீ ஒளிச்சு வச்சுருக்க....அதை நான் பிடிச்சு வச்சிருக்கேன்....”
“எ..எந்த மெயில்?”
“உன் அக்கா நான்...”
“அது....உனக்கு இப்ப வேண்டாம் மிர்னு....ஒலிம்பிக் முடியட்டும்....ப்ளீஸ்...”
“அந்த மெயிலால ப்ரச்சனை எனக்கு இல்லை...உனக்குதான்....எனக்கென்ன...? நேத்தே பார்துட்டேன்....காலைல எதுலயாவது சொதப்புனனான்னு மிஹிர்ட்ட கேளு....இன்னைக்கு ப்ராக்டீஸ்ல என் ஹைட்...2.4 ஃபீட்....ஒலிம்பிக்ல இதை செய்தேன்னா நியூ வேர்ல்ட் ரெக்கார்ட்...என்னோட ரெக்கார்டை நானே 12த் டைம் ப்ரேக் பண்ணுவேன்... ஆனா நீயும் அத்தானும் எப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க...அதனால எனக்குன்னு பார்துட்டு நீ இந்த நேரத்துல கஷ்டபட தேவையில்லை...”
“அது....” நடந்ததை சொல்லி முடித்தாள் வேரி.
“ஒன்னு மட்டும் சொல்லுவேன் உனக்கு அறிவே இல்லை...
கடவுள் எகிப்த்ல அடிமையாய் இருந்த இஸ்ரேல் மக்களை காப்பாத்தி, செங்கடலைலாம் ரெண்டா பிளந்து கடல் நடுவுல வழி உண்டாக்கி கூட்டிட்டு வந்தாராம்... ஆனா அவங்க வாழ்றதுக்கான நாடை கடவுள் காண்பிச்சப்ப, இங்க உள்ளவங்களாம் குண்டா ஹைட்டா பலமா இருக்காங்க...எங்களை கொன்னு போட்டுருவாங்கன்னு பயந்து போய்... உள்ள போக மாட்டேன்னுடாங்களாம் .....அப்டி அடுத்தவங்கட்ட கொல்ல குடுக்கிறதுக்கு கடலை கடந்து கூட்டிட்டு வரனுமா என்ன...?அதை அவங்க யோசிக்கவே இல்லை.... அப்டிதான் இருக்கு நீ செய்து வச்சிருக்க வேலை....... உன் நிலத்தை பிடுங்க ஆயிரம் வழி இருக்கு...அதுக்கு இவ்ளவு சீரியஸா திட்டம்போட்டு... மேடையில அவமானபட்டு...கல்யாணம் செய்து...உன் அத்தனை கஷ்டங்களையும் அனுசரித்து...இனி உன்னையும் என்னையும் கொன்னுட்டு......”
பேசிக்கொண்டு போனவள் வாயை மூடினாள் வேரி.
தான் செய்திருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தெளிவாக புரிகிறது வேரிக்கு. புரிந்தும் புரியாமலும் ஆட்டம் காட்டிய மற்றொன்றும் கூட புரிந்து விட்டது.
“எனக்கு புரிஞ்சிட்டு மிர்னு....அவங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்....”
“ம்....இனி...” மிர்னாவை பேசவிடவில்லை வேரி.
“என் கஷ்டத்தை அவங்க அனுசரிச்சுன்னு ஏன் சொன்ன?”
“போன தடவை உங்க வீட்டுக்க்கு வந்தப்ப, வியன் என்னை தேடுறார்னு விளையாட்டாய் மாடில இருந்த உன் ட்ரெஸிங் ரூம்ல ஒளிஞ்சேன்.... அப்ப அங்க நீ மறச்சு வச்சிருந்த ஷீ டயப்பர் எல்லாம் பாத்தேன்...”
தங்கையை அணைத்துக் கொண்டாள் மிர்னா.
“விஷயம் புரிஞ்சப்ப ஷாக்கா...மனசெல்லாம் வலி...பட் கல்யாணத்துக்கு பிறகு நீ நல்லா இருக்கிறியேன்னு தோணவும் நிம்மதியாகிட்டு...ஆனா இப்ப அத்தானையும் உன்னையும் பார்க்கிறப்ப திரும்பவும் கஷ்டமா......”
“ஹேய்...எங்களுக்குள்ள இப்பவும் ஒரு ப்ரச்சனையும் இல்லை...நீ சொன்ன மாதிரி...இவ்ளவு தூரம் ரியோவுக்கு கூட்டி வந்துதான் கவின் என் மேல கோபத்தை காட்டனும்னு அவசியம் இல்லையே.......இது வேற...உங்கத்தான் லவ் பண்ற ஸ்டைல் இப்படித்தான் இருக்கும்.....அவர் மிஸ்டர் ரொமான்ஸ்.....இதுக்கு மேல சின்ன பிள்ள உன்ட்ட இதைப் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது...”.
அருகிலிருந்த மிர்னாவை துள்ளலாய் அணைத்து ஒரு முத்தமிட்டாள் தங்கை....
“நான் சின்னபிள்ளையாமா???? இந்த குட்டிப்பிள்ளலாம் என்னைப் பார்த்து இப்டி சொல்ற நிலமை வந்துட்டே.....சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டனும்....பி.கே வர்றேன் நான்.....ரெடியா இரு...”
எம் எம் மானசீகமாக சங்கல்ப்பம் எடுத்தாள்.
கணவன் செயல் காரணம் புரிபட உற்சாக வெள்ளம் உள்ளமெங்கும். வேரியின் வேர் முதலாய் இன்பம் இனபம்..
மிஸ்ட்டர். அழகு சுந்தரம் நீ திரும்ப என்ட்ட மாட்டிகிடுற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை....
எதோ சரி இல்லை ஆனால் எல்லாம் சரியாகிவிட்டதாக ஒரு உணர்வு மிர்னாவிற்குள்.
ஆனா இந்த வில்லினு சொல்லிக்கிற எலிய....இல்ல சுண்டெலிய கண்டுபிடிச்சாகனும்.
நினைத்துக் கொண்டாள் மிர்னா.
மறுநாள் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தொடங்கியது.
மிஹிரும் வியனும் அவளது பார்வைக்கு உட்பட்ட தூரத்தில். ஆனால் மற்றவர்கள் அவளறியா பார்வையாளர் கூட்டத்தில்.
அடுத்த சுற்றுக்கு மூன்றே ஜம்பில் முதலிடத்தில் தேர்வானாள் மிர்னா.
அன்று இரவு மிஹிருடன் அவள் மறுநாள் ஸ்ட்ரடஜீஸ் பத்தி பேசிக்கொண்டு இருக்கும்போது....மெல்ல அங்கிருந்து நழுவி அறைக்குள் இருந்த வேரி இடம் வந்தான் வியன்.
கவின் அடுத்த அறையில்.
‘அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்....”. கிசு கிசு குரல்.
எதையோ எழுதிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அதே குரலில் கேட்டாள் ...
“என்ன ஹெல்ப்...?”
“மிர்னு க்கு என்ன மாதிரி வெட்டிங் டிரஸ் பிடிக்கும்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...சும்மா இந்த கேட்லாக்ல எது நல்லா இருக்குதுன்னு பேச ஆரம்பிச்சீங்கன்னா அவளே சொல்லுவா...” கேட்லாக்கை நீட்டினான்...
“இதுல எனக்கு என்ன ப்ராஃபிட்? ஐம் அ பிஸினஸ் வுமன் யு நோ...” கிசிகிசுப்பிலே மொத்த உரையாடலும் தொடர்ந்தது.
“உங்கள அழகா அறுபது வயசு ராஜகுமாரியா காமிக்றமாதிரி ஒரு ட்ரஸ் கிடைக்கும்...”
“அப்ப எனக்கு அறுபது வயசாகிறப்ப இந்த ஹெல்ப்ப செஞ்சுதாரேன்...”
“என்ட தெய்வமே...ஒன்னுக்கு ரெண்டா படைச்சுருக்கியே...உன் வல்லமையே வல்லமை...” வானத்தைப் பார்த்துக் கொண்டான் வியன்.
“ரெண்டையும் உங்க வீட்டுக்கே அனுப்பிருக்காறே...அந்த குறிப்ப கவனிக்காம விட்டுடீங்களே...உங்க ரெண்டுபேரையும் சமாளிக்க இப்படி இருந்தால் தான் முடியும்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு...”
“அண்ணியாரே அடியேன் சரண்டர்...உங்க டிப்ஸ் என்னனு சொல்லுங்க...நோட் திஸ் பாய்ண்ட்...டிப்ஸ் ஒன்லி....”
“அது....அது வந்து....”