“பெருசா பள்ளம் பறிக்க போறீங்கன்னு தெரியுது....”
“இங்க பக்கத்துல அவ்டிங் போய்ட்டு வர ஹெல்ப் பண்ணனும்....”
“முதல்லயே சொன்னேன் டிப்ஸ் தான்னு....இப்ப இங்க இப்டிலாம் வெளிய போறது சரி வராது....அதுவும் கவினுக்கு தெரியாம போறதுன்னா இது க்ரைம்...” பாதுகாப்பு காரணமாக முடிந்தவரை அனைவரும் வெளியே செல்வதை தடை செய்து வைத்திருந்தனர் முக்கிய தலைகள்.
“அதான...இப்படில்லாம் சொல்லலைனா நீங்க அவர் தம்பி கிடையாதே...சரி போங்க....மிர்னுட்ட இன்னைக்கு நைட் வெட்டிங் டிரஸ் பத்தி கேட்டு வைக்கிறேன்...”
ஏமாற்றத்தை அவள் மறைக்க முயல்வது அப்பட்டமாக தெரிய...
“சாரி அண்ணி...நம்ம ஊருக்கு போனதும் எங்கனாலும் கூட்டிட்டு போறேன்...பட் இங்க...இப்ப வேண்டாம் ப்ளீஸ்....”
“.......”
“தயவு செய்து சிரிங்க அண்ணி.....நீங்க சிரிக்கலைனா நைட் எனக்கு தூக்கமே வராது...”
இன்னும் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“பிறகு... இப்படி ஒரு பயங்கர முகத்தைப் பார்த்துட்டு படுத்தா கெட்ட கெட்ட கனவா வருமே...”
“சே...இதுக்குதானா....? வரட்டும் வரட்டும்....நல்லா வரட்டும்...”
“நான் தூங்கலைனா உங்க ஆளும் தூங்க முடியாது....ஒரே ரூம்ல இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும்....”
வேரியின் முகம் மாறிவிட்டது.
“அவங்க நைட் நல்லா தூங்குறாங்களா...?”
“ம்ம்...உங்க ரெண்டு பேர்ட்டயும் மாட்டிகிட்டு காதல் படுற பாடு இருக்கே...எனக்கு தெரிஞ்சி உங்களபத்தி அவன் ஜாலியா கனவு காண்றான்....ஆனா கொஞ்சமே கொஞ்சம் கோபமாவும் இருக்கான்.....இந்த லாஜிக்லாம் கல்யாணம் ஆனாதான் புரியும் போல...” வியன் தொடங்க
“ம்...அம்மா தன் குழந்த செய்த தப்புக்காக கோபமா அடிக்றப்பயே கூட... கண்ல அடி பட்டுடக் கூடாது, கன்னத்தில அடிச்சா காதுக்கு ப்ரச்சனைனு...யோசிச்சு அடிக்றது இல்லையா.....அது மாதிரி தான் இதுவும்...”
“என்னது இங்க ரகசிய கூட்டணி.....நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அது சதியாலோசனையா இருக்குமே...?” கேட்டபடி மிர்னா வர
அதன் பின் இந்த பேச்சு வேறு திசையில் பயணித்தது.
அன்று இரண்டாம் சுற்று மிர்னாவிற்கு. போட்டி கடுமையாக இருந்தாலும் முதல் இடத்தில் மிர்னா அடுத்த சுற்றுக்கு தேர்வாகி இருந்தாள்.
வீட்டிற்கு வரவும் உற்சாக வார்த்தைகள் முடிய அனைவரும் அதிகாலையே எழுந்து கிளம்பி இருந்ததால் ஓய்வு அவசியம் என உணர்ந்து அவரவர் படுக்கையில் துயில, இதுதான் தன் திட்டத்தை நிறைவேற்ற சரியான தருணம் என உணர்ந்து வேரி வெளியே கிளம்பிவிட்டாள்.
வியனே மறுக்கும் போது கவின் சம்மதிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அதற்காக இதை தள்ளிப் போட முடியாது.
டாக்ஸியில் போய்விட்டு டக்ஸியில் வரபோகிறாள். இவர்கள் விழித்தெழும் முன் வந்து விடலாம். வந்த பின் சொல்லிக்கொள்ளலாம்.
இன்டெர் நெட்டில் கண்டுபிடித்திருந்த டாக்ஸி புக்கிங் எண்ணை கொண்டு டாக்ஸி வரவைத்து கிளம்பிவிட்டாள்.
இடத்தை சொன்ன உடன் டாக்ஸி டிரைவரும் குழப்பம் இன்றி அந்த இடத்தில் கொண்டு இறக்கிவிட்டார். அதுவரை எல்லாம் சுமுகமாகவே சென்றது.
மொழி ப்ரச்சனையாய் இருந்தாலும் வந்த வேலையை முடித்துக் கொண்டு இவள் வெளிவந்து டாக்ஸி புக் செய்ய மொபைலை தேடும் போதுதான் தன் மொபலை டாக்ஸியிலேயே விட்டிருப்பதை உணர்ந்தாள்.
மொழி தெரியாத இடத்தில் இவள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ?
இவள் இடத்தில் கவின் இருந்தால் என்ன செய்வான்?
பயப்பட கூடாது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வந்து சென்ற டாக்ஸிகளில் பயணிகள். நிற்காமல் சென்றன அவை.
குத்து மதிப்பாக வரும்போது வந்த வழி என ஒரு திசையை நோக்கி நடந்தாள். அங்கு சென்றால் டாக்ஸி கிடைக்கலாம்....
யேசப்பா ஹெல்ப் பண்ணுங்க....ப்ளீஸ்
ஆகஸ்ட் மாதம் பிரேசிலுக்கு மழைக்காலம் இல்லை என்றாலும்...மழை வரா காலமும் இல்லை. திடுமென மழை தூர துவங்கி கடுகு வெடிக்கும் நேரத்திற்குள் காற்றுடன் கை கோர்த்து கடுமழையானது.
மாலைதான் ஆனால் இரவாய் இருண்டது சூழல்.
இரண்டு நொடிக்குள் முழுக்க நனைந்துவிட்டவளை தூக்கி தூர வீசிவிடுவேன் என மிரட்டியது காற்று.
கண்ணுக்கு தெரிந்த மழை மறைப்பை தேடினாள். வெறும் உயர் கான்க்ரீட் சுவர்கள் கொண்ட சாலை. போர்டிகோ இல்லாத கட்டிடவரிசைகள்.
தொலைவில் ஒரு சிறு போர்டிகோ தெரிய....அங்கு சென்று ஒதுங்கினாள். தெருவில் ஆள் நடமாட்டாம் இல்லை என்ற நிலை. நழுவியது நேரம். சூழ்ந்தது இருள். மழைதான் வானத்தின் தூதை தரைக்கு தந்து முடித்தபாடில்லை....
வீட்டில் விழித்தெழுந்த கவின் மனதில் மனைவியை குறித்து ஒரு தவிப்பு. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் மெல்ல வேரியின் அறையை நோக்கிப் போனான்.
தூங்குகிறவளைப் பார்த்துவிட்டாவது வரலாம்.
கதவை தட்ட நினைத்தால் அது உள்ளே பூட்டி இருக்கவில்லை என்று புரிகிறது..
இருந்தாலும் மெல்ல தட்டினான்.
பதில் இல்லை.
பாவம் அசதியில் தூங்கும் சகோதரிகளை ஏன் எழுப்ப வேண்டும்.
திரும்பி வர நினைத்தான். மனம் கேட்காமல் அறைக்குள் எட்டிப் பார்த்தான். கட்டிலில் மிர்னா. இவன் மனைவி எங்கே????
வீடு முழுவதும் தேடியும் அவள் இல்லை என்றானதும் அவசரமாக அவளுக்கு ஃபோன் செய்தான்.
யாரும் அதை ஏற்கத்தான் இல்லை.
வெளியில் கொட்டும் மழை. இவனுடையவள் மொழி தெரியாத இங்கு!!!! நடந்து வரும் கொலை முயற்சிகளும்...அந்த மெயில்களும் ஞாபகம் வருகிறது.
எங்கடா போய்ட்ட குல்ஸ்....???
“யேசப்பா எனக்கு அவளை எப்டியாவது திருப்பி கொடுத்துடுங்க...அவ குழந்தை தனத்துக்காக இன்னொருதடவை இப்டி கோபப்படவேமாட்டேன்....”
அவசர அவசரமாக தேவை என எண்ணியவைகளை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினான்.
இந்த கொடும் மழை காரை அனுமதிக்குமா???
இதில் அவள் எப்படி சமாளிக்கிறாளோ?
அவ்ளவுதான் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆனால் எங்கு போய் தேட?????!!!!