(Reading time: 20 - 40 minutes)

சுகவிதா தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள். மனமெங்கும் ஒருவித நிறைவு. இதயம் முதல் இதழ்கள் வரை தித்திதான் அரண். அது கனவின் பலன். திரும்பி தன் மகளைப் பார்த்தாள் குழந்தை சற்று திரும்பி படுத்திருந்தாள். தூக்கத்தில் எதையோ கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

மனம் இன்னுமாய் நிறைந்து பொங்கியது சுகவிதாவிற்கு. எல்லாம் அவளுக்கு நிறைவாக இருப்பதாக ஒரு உணர்வு. ஒரு பூரணம் இதயம் வசம்.

எழுந்து அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். இன்னும் மனதில் மாருத அலைகள். எதிர் அறை வாசல் கதவை திறந்து வைத்து அதன் வாசலில் இழுத்து வந்து கட்டிலைப் போட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் கணவன்.

இவள் கூப்பிட்டால் உடனடியாக வர வேண்டும் என்பதற்காகவா?

சற்று முன்பு இவள் பார்த்த ஹயாவின் படுக்கும் விதம் ஞாபகம் வருகிறது.

மகள் தன் அப்பாவை பின்பற்றுகிறாள் போலும் இதில். வேறு எதிலெல்லாம் ஹயா இவனைப் போல் இருக்கிறாள்? கண்கள் அவன் உருவத்தை அலசுகிறது.

இருந்த மாருதம் சுமக்கும் மன நிலையா இல்லை இப்படி ஒரு பழக்கம் முன்பு அவளுக்கு இருந்திருக்கிறதா தெரியவில்லை, அருகில் படுக்கையில் அமர்ந்து அவன் முகம் அருகில் படுக்கையில் இருந்த அவனது வலக்கையை எடுத்து தன் கைக்குள் வைத்தாள்.

எதை உணர்ந்தாலோ இல்லையோ அவள் உணர்ந்தது கடும் சூடு. ஆம் அவன் கொதித்துக் கொண்டு இருந்தான். அவளையும் அறியாமல் அவன் நெற்றியைத் தொடுகிறது கை. அரண்டு போகிறது நெஞ்சம். இது வெறும் காய்ச்சல் இல்லை…..இவனுக்கு என்ன? அவசரமாக சுற்றிலும் பார்வையை ஓட விடுகிறாள். எந்த மருந்தின் அடையாளமும் இல்லை.

ப்ச்…அவன் ரூம் இது இல்லையே….கடவுளே அந்த ரூம் சாவி இவட்ட….

இப்ப என்ன செய்யனும்….? தட தடக்கும் இதயத்தோடு வரவேற்பறை நோக்கி ஓடுகிறாள். யாராவது வேண்டுமே….

“ப்ளீஸ் யாராவது வாங்களேன்…” யாரை கூப்பிட?

அவனது அப்பா ஞாபகம் வருகிறது. அவரை இவள் எப்படி கூப்பிட வேண்டும்?

“மாமா…..மாமா…..ப்ளீஸ் வாங்களேன்….அரண்க்கு….” கூப்பிட்டுகொண்டே இவள் அடுத்த அறையைப் பார்த்து ஓட இதற்குள் அவரே வந்துவிட்டார்.

“என்னாச்சுமா…?” அவர் முகத்திலும் பதற்றம். அவன் படுத்திருந்த அறையை நோக்கி ஓடுகிறார். இவள் அவர் பின்.

அடுத்து நடந்ததெல்லாவற்றிலும் இவள் வெறும் பார்வையாளர் மாத்திரமே….டாக்டருக்கு போன் கால் பறக்கிறது.

அரணை அவசரமாக காரிலேற்ற இவளும் ஹயாவுடன் உள்ளேற சில நிமிடங்களில் மருத்துவமனை.

நடப்பது என்னதென்று புரியாமல் அரை மணி நேரம். அடுத்து இவளை அழைத்து செல்கிறார் அவனது அப்பா.

இப்பொழுது அறையில் முன்பு போல் முழு உற்சாகமாக அவன். “ஐ’ம் ஆல் ரைட் டட்…” என்றபடி அவன் அப்பாவைப் பார்த்தவன் பின் வரும் இவள் முகம் பார்த்தவுடன் முகம் கனிகிறான்.

இவளையும் அறியாமல் இவள் கண்ணில் கட்டியிருந்த நீர் காரணமா?

“அது ஒன்னுமில்லமா…சிக்‌ஸ் மன்ந்த்ஸ் மூவ்மென்டே இல்லாம இருந்துட்டான் இல்லையா…..அதோட ரெஃஸ்ட் எடுக்கனும்னு சொன்னாலும் கேட்காமா சார் ட்ரிப் அடிச்சுருப்பார் போல….அதான்…பட் பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை….இன்னும் 2 மந்த்ஸ்  நான் சொல்றத ஃபாலோ பண்ணா பழைய ஃபார்முக்கு வந்துடுவான் பையன்…”

டாக்டர் இயல்பாய் சொன்னார். அவர் அரண் வீட்டாருக்கு  நெருக்கமானவராக இருப்பார் போலும்.

6 மந்த்ஸ் இவனுக்கு எதோ ஆயிற்றா? அதனால் தான் இவளைப் பார்க்க வரவில்லையா? என்னவாயிற்று?

ன்று இரவு வீடு திரும்பிவிட்டார்கள் தான். அவன் அறை சாவியை அவனிடம் கொடுத்துவிட்டாள் முதல் வேலையாக. அவன் மருந்து மாத்திரைகள் அங்கு இருக்கும் என்ற நினைவில்.

இருப்பினும் இவள் தன் அறைக்கு செல்லும்போது அங்கு இவள் அறையை அவன் அறையுடன் இணைக்கும் கதவிற்கு இவள் புறம்  தாழ்பாள் இணைக்கப்பட்டு பூட்டி இருந்தது.

அன்று இரவு சுகவிதாவிற்கு தூக்கம் வர வெகு நேரமாயிற்று. மனமெல்லாம் ஒரே குழப்பம். இவ்வளவு நேரம் இவள் தன் நிஜ நினைவுகளை மறந்து கனவை அல்லவா பின்பற்றி இருக்கிறாள் அரண் விஷயத்தில்.

எது நிஜ அரண்?

ரளவிற்கு மேல் தூக்கம் வராமல் இருட்டு அறையில் படுத்திருக்க முடியவில்லை.லைட்டை ஆன் செய்தால் ஹயா விழித்துவிடுவாளே. ஆக தூங்கும் மகளை விலகி ஒரு முறைக்கு இரு முறை பார்த்து அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என உறுதி செய்து கொண்டு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

என்ன செய்யலாம்? சிறிது நேரம் அங்கேயே நின்றாள்.

வெளியே தோட்டத்திற்கு போகலாம். ஆனால் கதவு பூட்டி இருக்குமே…மாடி நோக்கி சென்றாள். அங்குள்ள அறை பால்கனியில் போய் நிற்கலாம் சிறிது நேரம்.

மாடியில் இருந்த அறைகளில் இரண்டாவது அறைக்கு சென்றாள். அங்கிருந்து தான் தோட்டம் நன்றாக தெரியும் என்று தோன்றியது.

அறை ஏனோ வெறுமையாய் இருப்பதாய் தோன்றியது. ஒரு சோஃபாவும் கம்ப்யூட்டர் ஏந்திய மேஜையும் அவ்வளவே…..மற்றபடி இருந்த பொருட்கள் அகற்றபட்டிருந்த அடையாளங்கள்.

போட்டோக்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இவர்களும் இவள் அப்பா போல்தானோ…?

இவளுக்கு தானாக விஷயங்கள் நியாபகம் வர வேன்டும் புகைப் படங்களை காண்பிக்க வேண்டாம் என சொன்னதும் அவரும் மருத்துவ மனையிலிருந்து இவளை வீட்டிற்கு கூட்டிச்செல்லும் முன் வீட்டிலிருந்த எல்லாவற்றையும் இப்படித்தான் கழற்றி மறைத்திருந்தார்.

 ஆனால் இவளுக்கு இப்படி ஒரு நிலை என இந்த அரண் வீட்டிற்கு எப்படி தெரியும்??

யோசிச்சு ஒரு ப்ரயோஜனமும் இல்ல….பால்கனிக்காவது போகலாம்…

இவள் பால்கனி கதவின் தாழ்பாளை நீக்கும் போதே காதில் ஏதோ பேச்சுக் குரல் கேட்கிறது வெளிபுறம் தோட்டத்திலிருந்து.

கிசு கிசு ஆண் குரல். “யாரோ வர்றாங்க…..அந்த லூசு போல…..அவட்ட மாட்டினா அவ்ளவுதான்…” சொல்லிக்கொண்டே எங்கோ யாரோ ஓடும் சத்தம். இவளைத்தான் சொல்கிறான் போலும்…இவள் கதவு திறந்து பால்கனி சென்று பார்க்கும் போது சுவர் ஓரத்திலிருந்த புதர் போன்ற க்ரோட்டன்ஸ் அசைவது தெரிகிறது அங்கு யாராவது நிச்சயம் இருக்க வேண்டும்.

யார் அது? அதுவும் இந்த நேரத்தில்? நேரத்தைப் பார்த்தாள் இரவு 2 மணி. ஏன் ஓடி மறைகிறார்கள்? கதவை திறந்து வெளியில் போய் பார்க்கலாமா? வெளிக் கதவின் சாவி எங்கு இருக்கும்?

யோசனையுடன் வரவேற்பறை அடைந்த போது சாவி கதவில் ஆடிக் கொண்டிருந்தது. அதோடு கதவும் சற்று இடைவெளியிட்டு திறந்திருக்க அதன் வழியே கசிந்து கொண்டிருந்தது தோட்ட மின் கம்பங்களின் வெளிச்சம். அப்படியானால்????

மெல்ல பூனை நடையிட்டு தோட்டத்திற்கு வந்தாள் சுகவிதா. அவள் கழுத்தில் வந்து அமர்ந்தது ஒரு கை.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.