"என் பையனை புரிஞ்சிப்பன்னு நம்பிக்கை இருக்கு!"-என்று அவளை அணைத்துக்கொண்டாள்.
"இனி என் பையனை நினைத்து கவலை இல்லை...போ!"
அவள் மனம் பதைபதைக்க சென்றாள்.தோழியரின் பரிகாசம் அவள் செவீகளில் விழவில்லை.ஏனெனில்,நடக்க போவதை அவள் அறிவாள்.தயக்கத்தோடு உள்ளே நுழைந்தாள்.
ராகுல் அறையின் பலகனி வழியே வெண்ணிலவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.கால் கொலுசின் சப்தம் கேட்டதும் மனம் தடுமாறியது அவனுக்கு!!பெரும் தயக்கம் அங்கே குடிக்கொண்து.
மெல்ல திரும்பினான்.
அவள் தலைக்குனிந்தப்படி நின்றிருந்தாள்.
"உன்கிட்ட....கொஞ்சம் பேசணும் சதி!"
அவள் நிமிர்ந்தாள்..
"திருமண வாழ்க்கைப்பற்றி உனக்குள்ள ஆயிரம் கனவு இருக்கும்!ஆனா,அதை எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலே நான் இருக்கேன்.எனக்கு இதுவரைக்கும் கல்யாணத்தைப் பற்றி எந்த கனவும் இருந்ததில்லை..நடந்த எல்லாத்தையும் ஏற்றுக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்!அதுவரைக்கும்...."
"புரியுதுங்க...நீங்க கவலைப்படாதீங்க...நம்முடைய பந்தத்தைப்பற்றி யாருக்கும் தெரியாம பார்த்துக்கிறேன்!"-அவன் மௌனித்தான்.
"நீங்க தூங்குங்க..."
"நீ??"
"கொஞ்ச நேரம் கழித்து தூங்குறேன்!"-அவன் அமைதியாக சென்று உறங்க தொடங்கினான்.அவன் உறங்கியது நிருபனமானதும்,அவனருகே சென்றாள்.அவள் இதழில் புன்னகை மலர்ந்தது.
"இதுதான் சொல்லுவீங்கன்னு தெரியாதா??எனக்கு நீங்க என்கூட இருக்கிறதே போதும்!வேற எதுவும் வேணாம்.நீங்க என்ன கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும்,அதுக்கு நிச்சயம. நான் மருந்து போடுவேன்."-என்று அவனுக்கு போர்த்திவிட்டாள்.
என்ன நினைத்தாளோ அவனது காலடியில் அமர்ந்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.....
"தாள்பட்டாள் நங்கை தலைவன் தாளை....."
தொடரும்
{kunena_discuss:877}