அடுத்து அவன் சொன்னது போல் இயல்பாய் போய் அங்கு மெகந்தி வைப்பதற்காக தன் கைகளை நீட்டிக் கொண்டிருந்த நிலவினியை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள் பவிஷ்யா.
“ஏய் நிலு இதை நேத்தே வச்சுருக்கலாம்ல?” யாரோ கேட்க…
“அப்ப மூட் இல்லை….இப்ப சரி வைக்கலாம்னு தோணிட்டு அதான்….”
“ஏன் யவி அண்ணா வைக்க சொல்லிட்டாங்களா?”
“ம்….இல்லை வந்து வச்சுவிடுறேன்னு சொன்னாங்க…..ஏன் தேவையில்லாம அவங்களை அலய விடனும்னு பார்லருக்கு சொல்லி அனுப்பிட்டேன்….போதுமா விளக்கம்” இப்படித்தான் நிலவினி தன்னை ஓட்டிக் கொண்டிருந்தவர்களை சமாளித்துக் கொண்டிருந்தாள்.
ஆட்கள் முன்னிலையில் அழுது கொண்டிருக்க அவளால் முடியாது….. நாளை கல்யாணத்தை வைத்துக் கொண்டு இன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் அடுத்தவங்க என்ன அவளோட அக்கால இருந்து அந்த லோக்ஸோடொன்டா அத்தையிலிருந்து அத்தனை பேரும் ஆளாளுக்கு காரணம் கண்டு பிடிச்சு……ஹப்பா வீட்ல இருக்ற நிம்மதி இப்பவே காணாம போய்டும்….
கல்யாண நாள் நெருங்க நெருங்க அப்பாவைப் பார்க்கும் போதும் அப்பாவின் பூரிப்பையும் திருப்தியையும் காணும் போதும்….அம்மா ஆசை ஆசையாய் அவளுக்காக ஒன்றொன்றாய் செய்யும் போதும்……அவர்களின் மகிழ்ச்சியை அவ்வளவு எளிதாக கலைந்து போகவிட இவள் தயாராயில்லை…
எல்லாவற்றிற்கும் மேலாக இவளது அடி மனதில் இன்னும் கூட யவ்வனை முதன் முதலாக பார்த்த அந்த நொடியும் அதோனோடு சேர்ந்து தோன்றிய நல்லது நடக்கப் போகுது என்று உள்ளுணர்வில் உதித்த அந்த சுகவிடுதலை உணர்வும்…..இன்னும் கூட அப்படியேதான் இருக்கிறது…..நாளை யவ்வனோடு போக வேண்டும் இவள் ….. என்ற நிலை இவளுக்கு பயம் தர மறுப்பதும் அதனால் தான்.
அதைப் பற்றிதான் ஆயிரம் விதமாக யோசித்துவிட்டாள் இவள். கடைசியில் இப்படியாகத்தான் அவளுக்கு முடிவுக்கு வரமுடிந்தது. ‘மேரேஜ் பண்ற ப்ளான்ல வேணா அவன் ஜெயிச்சுறுக்கலாம்….ஆனா அதோட எல்லாம் முடிஞ்சிதுன்னு இல்லையே…..அடுத்து அவன் இப்ப செய்துறுக்க வேலைக்கு அவனை கதற வைக்க இவளுக்கு இப்பதானே சான்ஸ் கிடைக்கப் போவுது……அவன் பக்கத்துல இருந்தாதான அவனை அலற விடலாம்….இன்னைக்கு வரை ஊஞ்சல் அவனுக்கு ஃபேவரா ஆடிச்சுன்னா….இனி இவ விரும்புற டைரக்ஷ்னல ஆடும்…ஆட வைப்பா….அது நாளையில இருந்து ஆரம்பிக்கப் போகுதுல்ல…..அதான் இவளுக்கு இப்படி ஃபீல் ஆகுது போல…’
இப்டி ஒரு ரீசன் கண்டு பிடித்து அதை தவிர எதையும் யோசிக்க விரும்பாமல்….யோசிச்சா அழுகையா வருமே…..அவனை இவளுக்கு பிடிச்சிறுந்துதே…..கல்யாணமே செய்யக் கூடாதுன்னு நினச்சிருந்தவ, அவனுக்காக அதில் கூட ஒருவகையில் அவனை நம்ப தயாராகிட்டு இருந்தாளே…..இப்டி செய்துட்டானே…. அவள் மனதிற்கு புரிந்தது போல் அவன் நல்லவனா இருந்திருக்க கூடாதா?.....
மனதை அந்த எட்டிக்காய் பிரட்டலில் இருந்து பிடுங்கி எடுத்து எதிரில் அங்கு மிங்குமாய் நின்று இவளை கேமிராவில் கவர் செய்து கொண்டிருந்த பவிஷ்யா மீது வைத்தாள். எதையாவது செய்து இப்பொழுது இவள் மனம் அழுகைக்குள் நழுவாமல் செய்தாக வேண்டும்…
ஆக பவியை சீண்ட நினைத்தவள், பவி தன் கேமிராவில் எடுத்துக் கொண்டிருக்கிறாள் என நினைத்து “ஐ லவ் யூ….ஐ லவ் யூ….ஐ லவ் யூ…” என்றபடி இரண்டு கைகளையும் விரித்தாள்…. வழக்கமாக இவள் இப்படி செய்தால் அவளோ….”ஐயோ அது நான் இல்ல…நான் இல்ல….நான் இல்ல” என்றபடி தப்பி ஓடுவது போல் ஒரு எக்ஷ்ப்ரெஷன் கொடுப்பாள்….
அதை நிலு இப்போதும் எதிர் பார்க்க…..ரெஜினா வாய்விட்டு சிரித்தாளானால்….பவிஷ்யாவோ “இன்னும் பதினெட்டு மணி நேரத்தில் இந்த ஐ லவ் யூக்கு பக்காவான பதில் கிடைக்கும் அதுக்கு நான் கேரண்டி” என்றாள்….
ஏதோ யவி சம்பந்தமாக கேலி செய்கிறார்கள் என்பது வரை நிலவினிக்கு புரிந்தது….ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி எதைப் பேசவும் அவளுக்கு விருப்பம் இல்லை….பவிஷ்யாவிடம் கூட அந்த மெயில் விஷயத்தை இவள் சொல்லவில்லை….இவளை நினச்சு அவளும் வேதனைப்பட்டு என்ன ப்ரயோஜனம் என்பது இவளுக்கு….ஆக இவள் உண்மையாகவே திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள் என பவிஷ்யா நினைத்துக் கொண்டிருப்பதை கலைக்க இவளுக்கு பிடிக்கவில்லை…..
பவிஷ்யாவிற்கு கொண்டல்புரம் சென்று திரும்பிய அன்று நிலவினிக்கு திருமணத்தில் முழு சம்மதம் வந்துவிட்டது என்று தோன்றியது…
யவ்வனுடன் அவள் அங்கு நடந்து கொண்ட விதம்…. நாயப் பார்த்தா அலர்ற நிலு……யவி அண்ணா பக்கத்துல இருக்கிறப்ப ரோவர்ட்டயே விளையாடினாளே….அடுத்தும் திரும்பி வரும் வழியில்…..காரில் அபயனுடன் நிலு பேசிக் கொண்டிருந்த விதம்…..அவன் அண்ணி அண்ணி என வார்த்தைக்கு வார்த்தை பேசும் போது....அதே வகை உறவின் உரிமையில் இவள் பேசிக் கொண்டிருந்தாள் அதுவும் கொண்டல்புர பழக்க வழக்கங்களைப் பத்தி….அங்கு லைப்ரரில இவள் மெம்பராகிறது….. யவ்வனோட வொர்க்கிங் அவர்ஸ்…. வீட்ல இருக்றப்ப எப்டிலாம் டைம் பாஸ் பண்ணலாம் என ஏதேதோ பேச்சு….அதுவே சொல்லவில்லையா நிலு மனதில் என்னவென… ஆக அடுத்து பவிஷ்யாவும் நிலுவுகும் யவிக்கும் இடையில் எல்லாம் சரியாகிவிட்டதென்றே நினைத்திருக்கிறாள்.