மனதோர மழைச்சாரல்... - 20 - வத்ஸலா
சில நொடிகள் இடைவெளி விட்டு மறுபடியும் தட்டபட்டது அறைக்கதவு. திறந்தார் ராமன்.. வெளியே நின்றிருந்தார் சஞ்சா விட்டு சென்றிருந்த அந்த உதவியாளர்.
'சாரி சார்... ஒரு முக்கியமான விஷயம்...' உள்ளே வந்தார் அந்த உதவியாளர். 'இந்த பேப்பர்லே ஒரு நியூஸ் வந்திருக்கு' அவர் பார்வை கட்டிலில் இருந்த ஜானகி அம்மாவை தொட்டு திரும்பியது.
தயக்கமான குரலில் சொன்னார் அவர் 'நீங்க இங்கேதான் இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்களை பார்க்கணும் வெளியிலே ப்ரெஸ்காரங்க எல்லாரும் வெயிட் பண்றாங்க சார். நீங்க.. அது...' பேப்பரை நீட்டியபடியே பேசியவரை கேள்வியாக பார்த்தபடியே பேப்பரை வாங்கினான் ரிஷி.
'நான் வெளிய இருக்கேன் சார் ......' போய் விட்டார் அவர்.
அந்த தினசரியில் வேறொன்றும் பெரிதாக இல்லை. ஒரு கதை வெளியாகி இருந்தது அவ்வளவே.!!! அது அவனது கதை!!!! அவனே அறிந்திராத அவனது கதை!!!! அட்சரம் பிசகாமல் வெளியாகியிருந்தது!!!! இப்போது அது ஊருக்கே வெளிச்சமாகி இருந்தது.!!!!
அதற்கு சாட்சியாக அந்த செய்திக்கு மேலே பிரசுரமாகி இருந்தது அந்த புகைப்படம்!!!! ஜானகி அம்மாவும் அவரது முதல் மகனும் இருக்கும் அந்த புகைப்படம்!!!! அரவிதாட்சன் அவரிடம் முன்பு சொன்னதை வைத்து அந்த புகைப்படத்தையும் இணைத்துஅதை பத்திரிக்கைக்கு கொடுத்துவிட்டிருந்தார் மேகலா!!!!
ஸ்மரணை பறிபோய் மீண்டது அவனுக்கு. நகர கூட முடியாமல் கால் தரையோடு வேரோடி விட்டது போன்றதொரு பிரமை. உடல் திடீரென்று கனமாகி போனதொரு உணர்வு. அவன் இதுவரை போட்டு போட்டு பார்த்துக்கொண்டிருந்த கணக்குகள் எல்லாம் சரியே என்று சொல்லிகொண்டிருந்தன அந்த புகைப்படமும் செய்தியும்.
வேலைக்காரியாக ரிஷியின் அன்னை.!!!! தவிக்க விட்ட ரிஷி!!!!! என்ற தலைப்புடன் செய்தி.
'சில நாட்களாகவே பத்திரிக்கை செய்திகளில் பரபரப்பாக கிசுகிசுக்கப்ட்டுக்கொண்டிருக்கும் ரிஷியின் விவகாரதில் ஒரு திருப்பமாக வெளிவந்திருக்கிறது இந்த புகைப்படம். இதில் இருப்பவர் தான் ரிஷியை பெற்ற அன்னை என்று சொல்லப்படுகிறது இவர் பல வருடங்களுக்கு முன்னால் நடிகை சந்திரிக்காவின் வீட்டில் வேலைப்பார்த்தவர் என்பது குறிப்ப்பிடதக்கது..'
ஒரு முறை ஜானகி அம்மாவை பார்த்துவிட்டு மறுபடியும் அந்த புகைப்படத்தை பார்த்தான் ரிஷி.
'சில நாட்கள் முன் நடிகர் சஞ்சீவ் வீட்டு திருமணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த குழந்தை ரிஷியின் அண்ணன் குழந்தை என்று அறியப்படுகிறது. இந்த ரகசியங்கள் மக்களிடமிருந்து மறைக்கப்படுவதற்காக அஹல்யா இடையில் வந்ததாக தெரிகிறது.'
ஒரு முறை மூச்சை இழுத்து விட்டபடியே தொடர்ந்து படித்தான் ரிஷி.
'தான் ஒரு வீட்டு வேலை செய்பவரின் மகன் என்பதை ரிஷி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் அதனாலேயே அவரை சஞ்சீவின் வீட்டில் வேலைக்காரியாகவே விட்டு வைத்திருந்தார் என்றும் அவரது அன்னை அவருடன் இருக்க விரும்பியதாகவும் ரிஷி அதை விரும்பாததாலேயே இன்று உடல் நலம் பாதிக்க பட்டு அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தன்னை சமூகத்தில் ஒரு கண்ணியமான மனிதனாகவும், பிறருக்கு உதவும் உள்ளம் படைத்தவராகவும் எல்லாவற்றக்கும் மேலாக தாயிடம் அதீத பாசம் உள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் ரிஷி நடிகை சந்திரிக்கா தனது அன்னையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா??? இதற்கெல்லாம் பதில் சொல்வாரா இல்லையென்றால் தப்பித்து லண்டனுக்கு ஓடி விடுவாரா???? பொறுத்திருந்து பார்க்கலாம்.
சில நொடிகள் கண்களை இறுக மூடி திறந்தான் ரிஷி. முகத்தில் உணர்வுகளை துடைத்த பாவம். இதயம் கனத்து களைத்து கிடக்க பேப்பரை அங்கே இருந்த ஒரு நாற்காலியின் மீது போட்டு விட்டு அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தான். அடுத்து அடுத்து அங்கே இருந்த கண்கள் எல்லாம் அந்த நாளிதழில் ஓடி திகைத்து கலங்கி நிமிர தவறவில்லை.
அதே நேரத்தில் அங்கே பக்கத்து அறையில் இந்த செய்தியை இருபதாவது முறையாக வாசித்து முடித்திருந்தார் மேகலா. அவர் கொடுத்த செய்தி அச்சு பிசகாமல் வெளியிடப்பட்டிருந்து அதிலே. அந்த புகைப்படம், அருந்ததி கைப்பையில் இருந்த புகைப்படத்தின் பிரதி. அவளிடம் கைப்பையை திருப்பி தருவதற்கு முன்னால் பிரதி எடுத்து வந்திருந்தான் அஸ்வத்.
மகிழ்ச்சி. மனம் நிறைய சந்தோஷம். வாசலில் பத்திரிக்கையாளர்கள் சேர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை எப்படி சந்திக்க போகிறார்கள் ரிஷியும், சந்திரிக்காவும்???? பார்க்க வேண்டும்!!! பார்த்தே ஆக வேண்டும் அதை!!!! அழுது விடுவாளா சந்திரிக்கா??? ஆறி விடுமா??? இதோடு என் மனம் ஆறிவிடுமா??? கனல் மூச்சு மேகலாவிடம்.
அன்று!!! திகாம்பரம் 31 கால்கள் நடு நடுங்க உடல் மொத்தமும் வியர்வையில் குளித்திருக்க மேடை ஏறினார் மேகலா. கரகோஷங்கள் கேட்டுக்கொண்டிருந்தன, இன்னும் சில நிமிடங்களில் இவை எல்லாம் என்னவாகுமோ????