(Reading time: 5 - 10 minutes)

துக்கும் நேரம் வந்துட்டு பிரபு… அவளை கடவுளாப் பார்த்து விலக்கி வச்சிட்டார் காவேரி மூலமா…” என்றார் நிம்மதியுடன் தாத்தா…

“என்ன சொல்லுறீங்க தாத்தா?... காவேரி மதரா?... அவங்க எப்படி?... எனக்குப் புரியலை…” என்ற பிரபுவை,

“உனக்கு புரிஞ்ச வரைக்கும் போதும்… நீ கிளம்பு… உனக்கு நிறைய வேலை இருக்கும்…” என அங்கிருந்து வெளியேற்ற முனைந்தான் மகத்…

“டேய்… வேண்டாம்… நீயும் சொல்லமாட்ட… சொல்லுற அவரையும் விட மாட்டிக்குற… இதெல்லாம் நல்லா இல்ல… ஆமா சொல்லிட்டேன்…” என்று மிரட்டியவன்,

“தாத்தா நீங்க சொல்லுங்க…” என அவரிடம் கேட்க,

மகத் மீண்டும் தடுக்க முயற்சிக்க, இம்முறை சதாசிவம் தாத்தாவின் வார்த்தையால் அவன் அமைதியானான்….

தாத்தா அனைத்தையும் அவனிடத்தில் சொல்ல,

“ஷ்…. அப்பாடா.. ஒருவழியா… போய் தொலைஞ்சுட்டாளா?... நிம்மதி தாத்தா… இப்பதான் கேட்கவே சந்தோஷமா இருக்கு….” என்றான் உற்சாகத்துடன் பிரபு…

நடந்தவற்றை கேட்ட விஜய்க்கு, மனதினுள் நெருட, “மகத் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?... உங்க வொய்ஃப் தான் கன்யாவா?... அப்போ ருணதி???..” என தலையைப் பிடித்துக்கொண்டவனிடம்,

“டேய்… டேய்… டேய்… போதும்… இதுக்கு மேல யோசிச்சு குழப்பிக்காத… நீ வா…” என அவனை அழைத்த பிரபு,,

மகத்திடமும், தாத்தாவிடமும் விடைபெற்று சென்றான் விஜய்யுடன்….

அவர்கள் இருவரும் சென்றதும், “ஏன் மகத் ஒரு மாதிரி இருக்குற?...” என சதாசிவம் அவனைப் பார்த்து கேட்டார்…

“இல்ல தாத்தா… எதுவுமில்லை…” என்றான் மகத்…

“ருணதி என்ன சொல்லுவான்னு யோசிக்கிறியா?...”

“இல்ல தாத்தா… அவகிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா… ஆனா நான் இப்போ அவளைப் பத்தி யோசிக்கலை…”

“அப்போ வேற யாரை யோசிக்கிற?...”

“நதிகா….” என்றான் மகத் ஒற்றை வார்த்தையில்…

ஒரு பெருமூச்சை வெளியேற்றிய சதாசிவம், “வீணா மனசை போட்டு குழப்பிக்காத மகத்… முதலில் ருணதி கிட்ட பேசு… அந்த ஜித் கிட்ட இருந்து துருவனையும், ருணதியையும் காப்பாத்து… அதுக்குப்பிறகு, நதிகா விஷயத்தைப் பார்த்துக்கலாம்… கண்டிப்பா உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் மகத்…” என்றார் அவன் தோள்களில் கைவைத்தபடி…

தொடரும்

Episode # 28

Episode # 30

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.