நீ யார் என் விஷயத்துல தலையிட என கேட்க முழு வழி இருந்தும்……அபயன் இப்படி கெஞ்சியதில்…..இவள் உறவுக்கு அவன் கொடுத்த முக்கியதுவத்தில்….. இவள் இதயத்தில் இருந்த கோபம் எல்லாம் குறைந்து போனாலும்…. ப்ரச்சனை பூதம் அப்படியே அளவு குறையாமல் இருந்ததால்……
“என்ன நீங்க அபயன்….இதுவரைக்கும் ரெண்டு தடவை பார்த்திருப்பீங்களா…..? முதல் தடவை பார்த்து முழுசா இருபது நாள் கூட ஆகலை….இப்டி கல்யாண வீட்ல ஒரு ஜாலி மூட்ல இப்டில்லாம் தோணும்….அப்றம் கொஞ்ச நாள்ள எல்லாம் ஒன்னுமில்லைனு ஆகிடும்….அதுக்கு போய் இவ்ளவு தூரம் விஷயத்தை இழுத்துட்டீங்களே….. நம்ம ஊர்ல பொண்ணுங்க பேர் ரொம்ப முக்கியம்….” என மட்டும் சொல்லி…..சொல்ல வந்ததை முழுதாக சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி இல்லண்ணி……என் மனசுல அவ கிட்டதட்ட ஒன்றரை வருஷமா இருக்கா……இப்ப டீடெய்லா பேச உங்களுக்கு டைம் இருக்காது அண்ணி….உங்களை ஏற்கனவே கூப்டு விட்டாங்க…..நாளைக்கோ இல்லை அடுத்த நாளோ நீங்க கொஞ்சம் ஃப்ரீயானதும் டீடெய்லா சொல்றேன்…..
அதோட யவி நடந்துகிட்ட மாதிரி நடந்துகிறதுதான் அண்ணி எனக்கும் சரின்னு தோணும்…… பொண்ணை பிடிச்சுதுன்னா அம்மா அப்பா மூலமா நேர பொண்ணு வீட்ல போய் பொண்ணு கேட்கனும்னு தான் நினைப்பேன்….இப்டி வெளிய பொண்ணுட்ட பார்த்து பேசி சுத்றதுலாம் எனக்கும் சரின்னு படாது…..
இப்பவும் நம்ம வீட்ல இருந்து குடும்பமா பவிய பொண்ணு கேட்க போறமே தவிர….அவங்க வீட்ல இது லவ் மேரேஜ்னுலாம் காமிச்சுக்க போறது இல்லை….இன்ஃபேக்ட் எங்களுக்குள்ள வேற எந்த பேச்சு வார்த்தை கூட இப்ப வரைக்கும் கிடையாது….
நாம பொண்ணு கேட்டு அவ வீட்டுக்கு போனா…..அவ சரின்னு சொல்லுவாளா இல்லையான்னாவது எனக்கு தெரியனுமே….அம்மா மனசு இருக்கிற நிலமைக்கு எனக்கு விருப்பம்னு வீட்ல சொல்லி, அங்க பவி இஷ்டம் இல்லைனு சொல்லிட்டா ரொம்பவே கஷ்டமாகிடும் அண்ணி…..அதான் அவட்ட சம்மதம் கேட்டேன் அவ்ளவுதான்……
இப்பவும் இனி இன்னொரு டைம் இப்டி மீட் பண்ண மாட்டேன் ஓகேவா? நீங்க நிம்மதியா இன்னைக்கு டேவை எஞ்சாய் பண்ணுங்க ….சீக்கிரமா ரெடி ஆகி கீழ வாங்கண்னி எல்லோரும் வெயிட் பண்றாங்க ” என்றபடி அவன் இவள் முகத்தைப் பார்த்து தலை அசைக்க, பவி காதல் விஷயத்தில் நிம்மதிக்கும், தன் விஷயத்தில் ஒருவிதமான தவிப்பிற்கும் வந்திருந்தாள் நிலவினி…..
அரேஞ்ச்ட் மேரேஜ்னா பவி அப்பா ஒத்துப்பாங்களாதான் இருக்கும்…. அதோட இவங்க ரெண்டு பேரும் இனி இப்டி மீட் பண்ணலைனா பயப்பட ஒன்னும் இல்லை….யார் கண்ணுலயும், வாயிலயும் விழுந்து பவி அப்பா காதுக்கு விஷயம் போய்டுமோன்னு டென்ஷனாகவும் தேவை இல்லை… இப்படியாய் இவள் பவி விஷயத்தில் சமாதான பட்டாலும்…….
யவிக்கு இது லவ் மேரேஜா? என்ற கேள்வி ஏதோ ஒருவகையில் அந்த ஃபோட்டோ விஷயத்தை யவிக்கு ஃபேவராகவே நினைக்க வைத்தது அவளை…..
நகை விஷயத்தால் யவ்வன் மீது வந்திருந்த ஒரு இலகு நிலை, அதுவரைக்குமான அவள் திருமண மறுப்பினை ‘யவிய பார்த்து அப்டி பயப்படனும்னு அவசியம் இல்லையோ’ என்ற அளவிற்கு கொண்டு வந்திருந்ததால்…..
அதனாலதான யவிய வேண்டாம்னு நினைச்சோம்….மத்தபடி அவனை எல்லா வகையிலும் பிடிக்கத்தானே செய்துது….அதோட இவளுக்கு அவனை பிடிச்சிருக்குன்னும் அவனுக்கு தெரியுமே….இரண்டு பேருக்கும் விருப்பம் இருக்ற பட்ச்சத்தில் ஏதோ ஒரு அர்த்தமில்லாத குழப்பத்தில் இவ இந்த கல்யாணத்தை நிறுத்திட கூடாதுன்னு இப்டி ஃபோட்டோ காட்டி மிரட்டிடானோ….?
மிரட்டுனது கண்டிப்பா தப்புதான்…… அவனோட சிஸ்டரையோ மகளையோ இதுமாதிரி யாராவது மிரட்டினா ஒத்துப்பானாமா? அதெல்லாம் இவளால சரின்னு ஒத்துக்க முடியாது….ஆனா அதோட இன்டென்ஷன் லவ்வா? இவளுக்கும் விருப்பம் இருக்கப்போய்தான செய்துறுக்கான்? மத்தபடி எல்லா விஷயத்திலும் இவட்ட அவன் நல்லாதானே நடந்துகிறான்? என ஒரு மாதிரியாக சாய்த்தது அவளை….
இப்போதும் அந்த ஃபோட்டோ மிரட்டல் சரி என அவளுக்கு தோன்றவில்லை எனினும்….அதற்காக சின்னதாக சண்டை போட்டு…..நல்லதா நாலு லெக்சர் கொடுத்து அவனை மன்னிக்க தயாராகியிருந்தாள் மனதளவில்…. பிடிச்சிருக்கே அவனை!!! அன்பு அநேக பாவங்களை மூடுமாம்…
இவள் இப்படி கேப்பில் டூப்பில்லாம டூயட் மோடுக்கு போக….அதே நேரம் அபயன் கிளம்ப, எல்லாம் தாண்டி இப்போதோ மம்மி ரிடர்ன்ஸ் மனதில்.
கிளம்பி வாங்கன்னு அபயன் சொன்னால் இவ இப்ப கிளம்புன மாதிரி இல்லைனு அர்த்தமாகுது…..பட் மம்மி இருக்க ரூம்ல எப்டி ஜம்னு கிளம்பவாம்? என இவள் பேயே பயப்படுற அளவுக்கு பேந்த பேந்த முழிக்க
இதற்குள் அங்கே மனைவியை தேடி வந்திருந்தான் அவளது கணவன்….’கண்டிப்பா காரணமில்லாமல்லாம் போயிருக்க மாட்டான்…இப்பவும் இவளுக்காகத்தான் ஓடி வந்திருப்பான்’ என ஒன்று உள்ளுக்குள் ஓத….