சின்ன வயசில இருந்து அப்பா எங்க மூனு பேருக்கும் எப்பவும் சொல்றது..படிச்சுட்டு உங்களுக்கு பிடிச்ச எந்த வேலைனாலும் செய்ங்க…. ஆனா அது நம்ம ஊரு மாதிரி கிராமங்களுக்கு சோறு போடுற வேலையா இருந்தா நான் பிள்ளைங்க வளத்ததுல எனக்கு ஒரு அர்த்தம் இருக்கும்னு…. அதனாலதான் இதை ஆரம்பிச்சேன்…..அப்பாவுக்கு இந்த ஸ்கீம்ல அவ்ளவு சந்தோஷம்…அதனால காலைல நைட் மாடுலாம் பால்கறக்க அங்க பண்ணைக்கு வர்றப்ப அப்பா அம்மா எல்லோரும் அங்க போய்டுவாங்க……பொதுவா எல்லா நைட்டும் நானும் அதியும் கூட அங்க போவோம்….” அபயன் சாயந்தரமாய் சொல்லிக் கொண்டிருந்த அந்த விஷயம் இவளுக்கு ஞாபகம் இருக்கிறது….இந்த யவ்வன் ஃப்ராட தவிர வீட்ல எல்லோருமே நல்லவங்க போல என்றும் தோன்றுகிறது….
எப்படியும் கண்டிப்பா மொட்டைமாடில யாரும் இருக்க மாட்டாங்க……ஏன்னா பால் பண்ணைக்கு போயிருப்பாங்க…..கட கடவென மாடி படி ஏறினாள்….மாடியிலிருந்த இரண்டு தளங்களும் இவர்களது போர்ஷன் போலவே இருக்க….மொட்டை மாடியில் உயர வாட்டர் டேங்கை தவிர எதுவும் இல்லை….
.ஒரு மூலை சுவரிலும் மீதி மூன்று தூண்கள் மீதுமாக அமர்ந்திருந்த அந்த காங்க்ரீட் வட்டர் டேங்கை தாங்கி இருந்த அகல தூணில் உள்புறமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்….. மொட்டைமடிக்கே வந்து பார்த்தாலும் இருண்ட தூணுக்குப் பின் வந்து தேடினால் தவிர இவள் இருப்பது தெரிய சாத்தியமில்லை….
‘நைட் முழுக்க தேடி அலையட்டும் அவன்….வீட்ல மத்தவங்க என்னனு கேட்டா எப்டி பதில் சொல்றான்னு பார்ப்போம்….’
என்னென்னமோ ஞாபகம் வருகிறது இவளுக்கு……கண்ணில் நீராவின் முகம் வேறு வந்து போகுறது…….கல்யாண கோலத்தில் சிரித்தபடி நின்ற நீரா….அடுத்து உயிரற்ற சடலமாய் தரையில் படுக்க வைக்கப்படிருந்த நீரா என ஏதேதோ காட்சிகள்…… மெல்ல எழுந்து நின்று வீட்டிற்கு வெளியே பார்த்தாள்….
யவ்வன் வீட்டிற்கு வெளியே பின் பக்கம் பார்த்து போவது தெரிகிறது……அடுத்து கார் பார்க்கிங் போகிறான்…..இப்போது வெளியே….ஓகோ வெளிய போய் தேடுறியா…….தேடு தேடு நல்லா தேடு…..ஊர்காரங்க கேட்டா உண்மைய எப்டி சொல்லுவியாம் நீ? அனுபவி நல்லா அனுபவி…
பெட்சீட்டை வைத்து தன்னை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு……கடகடவென இறங்கி இவர்கள் போர்ஷன் வந்தவள் அங்கு யவ்வன் கார் சாவி வைக்கும் இடத்திலிருந்து மூன்று சாவிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு மீதி தளமும் இறங்கி வீட்டை விட்டு வெளியே வந்தாள். கதவை திறந்து வைத்திருப்பான் என இவள் எதிர் பார்த்தது போலவே திறந்து போட்டுவிட்டு போயிருந்தானே….
நேராக இடது ஓரமாக மரங்களுக்கு பின்னால் இருந்த கார் பார்க்கிங் போனவள்……யார் கண்ணிலும் படாமல் காரை திறந்து ஏறி….கார் வின்டோவை ஒரு ஒரு இஞ்ச் இறக்கிவிட்டு உள்ளே சுருண்டு படுத்துவிட்டாள் …. ஏற்கனவே தேடிட்டான்ல இப்போதைக்கு வரமாட்டான்…..
இங்கோ யவ்வனோ அவள் எதிர்பார்த்த வண்ணம் துடித்துக் கொண்டுதான் இருந்தான். உண்மையில் அவன் அந்த அணிலை வைத்து திட்டமிட்டெல்லாம் எதுவும் செய்திருக்கவில்லை……..அந்த அணில் மிக சின்ன குட்டியாக இருந்த போது எப்படியோ அடிபட்டு இவன் வீட்டுக்கு அருகில் விழுந்து கிடப்பதைப் பார்த்து எடுத்து வளர்க்க ஆரம்பித்திருந்தான் யவ்வன்.
விழுந்ததில் அதன் ஒரு கால் நிரந்தரமாக ஊனமாகி இருந்தது. அதனால் பூனை போன்ற பிற விலங்குகள் மற்றும் பறவைகள் அதை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்பதால் காலில் இந்த கொலுசு முத்து இணைப்பு….
இது ஓடி வரும் போது எழும்பும் சத்தத்தில் அவை விலகிப் போய்விடும் என இந்த ஏற்பாடு. அப்போதிருந்து இவனிடம் வளர்வதால் அது யவ்வனிடம் மட்டும் கையில் கூட வந்து அமரும்…..
மற்றபடி வெண்டிலேட்டர் வழியாய் இப்போதைய யவ்வனது வீட்டிற்குள் வந்து போகும்….அங்குள்ள ஒவொரு ரூமிலும் மேலே லாஃப்டில் வுட் வர்க் உண்டு….அதில் கூட இந்த அணிலுக்காக ஒரு துளை உள்புறமாக இருக்கும்….அது வழியாக படுக்கை அறை நான்கில் மூனு ரூம்குள்ள எங்க வேணும்னாலும் அதால வரமுடியும்…… வெளியிலும் சென்று விளையாட முடியும்…..அடைத்து வைத்து அதை வளர்க்கவில்லை யவ்வன்….
யவ்வன் வீட்டிலிருக்கும் பகல் நேரம் அந்த அணில் எப்படியும் வீட்டிற்குள்தான் சுற்றி வரும் பெரும்பாலும். அது வாடிக்கை என்பதால் அவனுக்கு அந்த கொலுசொலி பழகிப் போன ஒன்று. ஆக வினி பயந்து ஓடி வந்த போது அவள் இதற்காகத்தான் பயப்படுகிறாள் என அவன் ஊகித்திருக்கவில்லை.
அவள் ஏற்கனவே அவனிடம் இயல்பாக பழகவிலை என்பதால் இப்போதும் பயப்படும் போது என்னாச்சு என இவன் கேட்டதற்கு அவள் பதில் எதுவும் சொல்லாமல் போனதை இவன் துருவவுமில்லை அவ்வளவுதான்.