(Reading time: 28 - 55 minutes)

க அடுத்து மீதியுள்ள அனைத்து விழா முறைமகள் முடிந்து, இரெவுக்கென இவளை தயாராக்கி, அவன் காத்திருந்த இவர்களது போர்ஷனுக்குள் இவளை அவனது உறவுப் பெண்கள் அனுப்பி வைக்கும் போது….

அவள் ப்ளான் செய்த எதையும் செய்யாமால் ஒருவித தயக்கத்தை மட்டுமாய் சுமந்தபடி சண்டை போடுறதுக்கு அத்தனை பாய்ண்டையும் மனதிற்குள் ரிகர்சல் செய்தபடியே சென்றாள் இவள்.

இவர்கள் போர்ஷன் வாசல் வரை கூட யாரும் வரவில்லை…..அது பக்கத்தில் வரவும் “ஆல் த பெஸ்ட் அண்ணி” என அழைத்து வந்த அந்த இரு பெண்களும் திரும்பிப் போக….சாத்தியிருந்த தலைவாசல் கதவை தள்ளிவிட்டு இவள் உள்ளே நுழைந்தால்…..

ஓரத்து படுக்கை அறை….அதான் அப்பவே ரெடி பண்ணி இருந்தாங்களே அந்த அறை கதவு மட்டுமாய் திறக்கப்பட்டு அதிலிருந்து பூவாசமும் வெளிச்சமும் வெளி வந்து கொண்டிருக்க….மற்ற எல்லா இடத்திலும் இப்பொழுதே இரவு விளக்குகள்தான் எரிந்து கொண்டிருந்தன.

தான் திறந்து நுழைந்த தலைவாசல் கதவை பூட்டிவிட்டு மெல்ல அந்த அறையைப் பார்த்து நடக்க தொடங்கினாள் இவள். கால் பின்னுதே!!!!

சற்று நெருங்கவும் தான் அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறான் என புரிகிறது இவளுக்கு….. இங்க யாரு????? ஒரு வேளை ஃபோனோ???? ஆனாலும் இப்பவா?

இன்னும்  கொஞ்சம் அந்த அறை நோக்கி நகரவும்……அவன் பேச்சு சத்தம் தெளிவாக விழுகிறது இவள் காதில்…. “இன்னைக்கு மாதிரி இன்னும் நாலுநாள் அவ என்னைவிட்டு அசையாம பார்த்துக்கோ….அதுக்கப்புறம் அவளே என்னைவிட்டு போகாத மாதிரி பார்த்துகிறது என் பொறுப்பு…” குதுகலாமாய் அவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்? என்ன அர்த்தம் இதுக்கு? ஜல் ஜல் சத்தத்திற்கு பயந்து தன் கொலுசைக் கூட கழற்றி வைத்திருந்தவள் மெல்ல சென்று யவிக்கு தெரியாமல் மறைவாக நின்று அவன் இருந்த அறைக்குள் எட்டிப் பார்க்க….. அவன் கையில் அது…….ஒரு அணில்…..

அவன் அதை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்….அவன் கைக்கு வெளியிலாக தொங்கிக் கொண்டிருந்த அந்த அணிலின் ஒரு காலில், கொத்தாய் கொலுசு முத்து வைத்த மெட்டி போல் ஒரு வளையம் கழறா வண்ணம் மாட்டி இருந்தது…… ஜல் ஜல்லின் காரணம் சத்தமின்றி புரிந்தது இவளுக்கு…..அவனது சதியும் தான்……எல்லாம் நாடகம்!!!!

இந்த அணிலை வச்சு அவளை பயம் காட்டி….அதுக்குள்ள அவளே அவனை விட்டு போகாம பார்த்துபானாமா????

வெகு ஏமாற்றமாக உணர்ந்தாள் வினி….

கல்யாணத்தில் அவளுக்கு விருப்பம் இருந்தும், தெளிவிக்க காரணம் கூட சொல்லாமல் குழம்புகிறாள் என, அவன் இவளை ஏதோ மிரட்டி சம்மதிக்க வைத்ததை கூட எப்படியோ மன்னிக்க தயாராய் இருந்த அவள் மனதால் இதை இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை….

கட்டிய மனைவியை காமத்திற்காக கபட நாடகம் ஆடியா கட்டாயப் படுத்துவான் காதலித்து மணந்திருப்பவன்?? அப்போ அவனோட தேவை என்ன? வெறும் சரீர சுகம்தானா? இவ மனசு அவனுக்கு விஷயமே இலையா?

 அப்டியே இந்த சுகம் தான் அவனுக்கு முக்கியம்னா கூட அதுக்கு ஏன் இவ்ளவு ட்ராமா? இன்னைக்குதான் வேண்டாம்னு இவள் நினைத்தாலும்…..கொஞ்சம் பழகியதும் சில நாட்கள்ல இது நடக்கத்தானே போகுது….இதுக்கு முந்திய நொடிவரை இவளுமே அப்படித்தானே நினைத்திருந்தாள்….அதுவரைக்கும் கூட பொறுக்க முடியாதாமா இவனுக்கு?

உண்மையிலேயே அவன் தேவை இதுதானா?

இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால நைட் எதுவும் இல்லை பயப்படாதன்னு இவட்ட மண்டைய ஆட்டிட்டு……இங்க வந்து இவளோட சின்ன பயத்தை எந்த அளவுக்கு யூஸ் செய்ய ப்ளான் போட்டுகிட்டு இருக்கான் இவன்?

‘நானா எதுவும் செய்யலை…..நீ பயந்து போய் மேல விழுந்ததுலதான் எல்லாம் ஆகிட்டு’ என இவள் மீது பழி போடவா நினைத்திருக்கிறான்? ஆனால் ஏன்?

இப்ப எல்லாமே தப்பு தப்பா தெரியுதே….

முதல்ல நாயவச்சு இவளை பயம்காட்டி போட்டோ எடுத்து..…அதை வச்சு மிரட்டி இவளை சம்மதிக்க வச்சு கல்யாணமும் செய்தாச்சு….அடுத்து அணில வச்சு பயம்காட்டி ஃபர்ஸ்ட் நைட்டா…..??? எல்லாம் ஃப்ராடு……எதுக்கெடுத்தாலும் சதி…..இது பேரு காதலா??? கண்டிப்பா இல்லை…… இல்லவே இல்லை…..

இப்படி வந்து மாட்டிடாளே இவ….ஆனா இப்ப இவ என்ன செய்ய???

சட்டென தோணுகிறது நிலவினிக்கு…..உனக்கு மட்டும் தான் பயம் காட்ட தெரியுமா? எனக்கும் முடியும்…..சத்தமின்றி அடுத்த அறை சென்று ஒரு பெட் சீட்டை  மட்டும் எடுத்துக் கொண்டவள்……சென்று தலைவாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

“நம்ம ஊர்ல மட்டுமில்ல அண்ணி…சுத்தி உள்ள எல்லா ஊர்லயும், வீட்டுக்கு ஒரு மாடாவது நம்ம மாடு நிக்குது……மாட முதல்ல கொடுத்துடுவோம்….வளக்கிறது அவங்க பொறுப்பு…பால நம்மட்டதான் விக்கனும்…… பட் பால் காசு அவங்களுக்குதான்…..அதுல செர்டெய்ன் பெர்சென்ட் மாடோட விலையா கொஞ்சம் கொஞ்சமா கலெக்ட் செய்துப்போம்…..இதுதான் ஸ்கீம்…..அவங்களுக்கும் லாபம்….பெரிய அளவிலன்றதால நமக்கும் நல்ல ஃப்ராஃபிட்…. நல்லா போய்ட்டு இருக்கு…..ஒருவகையில எனக்கு ஆத்ம திருப்தியாவும் இருக்கு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.