அனைவரின் மனமும் மகிழ்ந்திருக்க ஆதி மீண்டுமாய் அவள் கழுத்தில் அவன் பரம்பரை தாலியை அணிவித்தான் இப்போது அவன் மனம் முழுக்க அவள் மீது காதல் இருந்தது நடக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை இருந்தது புது மாப்பிள்ளை கணக்காய் அவளை ரகசியமாய் கிள்ளி அவளின் அனல் பார்வையை ஆனந்தமாய் பெற்றுகொண்டிருக்க அன்று அங்கே அனைவருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்ய பட்டிருந்தது கோவிலுக்கு வந்திருந்தவர் அனைவரும் உணவு உண்டு இவர்களை வாழ்த்த அமைதியாய் தன் மனைவி மகளுடன் அவர்களின் ஆசியை பெற்று நின்று கொண்டிருந்தான் ஆதித்யன் ..மனோகரிக்கு மனம் நிறைந்திருந்தது நிச்சயம் தன் அம்மாயி யின் ஆத்மா இவளை இவ்வாறு கண்டு களித்திருக்கும் என நம்பினாள்..
இருவரின் மனமும் நம்பிக்கையில் நிறைந்திருக்க தாலிக
...
This story is now available on Chillzee KiMo.
...
படாத அன்னிக்கு உன்னை வீட்டுல விட்டுட்டு பாக்டரில ஒரு சின்ன வேலை இருக்குன்னு போனேன் வர்க் முடிச்சிட்டு திரும்ப வந்துட்டு இருந்தேன் அல்மோஸ்ட் 10 ஒ கிளாக் இருக்கும் கார் ஒட்டிட்டு வரும் போது யாரோ அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருக்க மாறி இருந்துச்சு சரின்னு கார நிறுத்திட்டு போய் பாத்தா அகல்யா ..