முதல்ல கோவம் வந்து அப்படியே போயிடலாம்னு தான் நினச்சேன் ஆனா என்னவோ சரண் செத்தத நேர்ல பார்த்த பின்னாடி மரணம் எவ்வளவு கொடுமைன்னு புரிஞ்சு இருந்துச்சு இவ செத்து போயிட்டா இவ அத்தை எப்படி அழுவாங்கன்னு யோசிச்சு போய் அவள தூக்கி கார்ல போடலாம்னு தொட்டா கையெடுத்து கும்பிட்டா நான் கூட என்னை அடையாளம் தெரிஞ்சதொன்னு நினச்சேன் ஆனா அவளுக்கு நான்னு தெரியல யாரோன்னு நினச்சிட்டு என்ட்ட பேசினா
தயவு செஞ்சு என்னை காப்பாதாதீங்க ..நான் வாழ தகுதி இல்லாதவ ..என்னை காப்பாத்தி நீங்க பாவத்த சுமக்க வேணாம்னு சொன்னா ...ஒரு நிமிஷம் அவ மேல வெச்ச பாசம் என்ட்ட மறுபடியும் வந்துச்சு ..எனக்கே பிடிக்காம அவள போய் ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டு என்னென்ன பண்ணணுமோ பண்ணிட்டு சரி ரத்த கரை படிஞ்ச டிரஸ் போட்டுட
...
This story is now available on Chillzee KiMo.
...
்புறம் இத பத்தி கேப்போம் இப்போ என்றபடி அவன் மீண்டும் அவன் இலக்கை நோக்கி பயணம் தொடர அவன் மகள் தடா சட்டம் போட்டாள் ..
ஆதி கலை அழறா அப்பறம் என்றபடி நழுவி விட்டாள் அவள்...கைக்கு எட்டினது வாய்க்கு எட்ட மாட்டேங்குது முதல்ல அம்மா இப்போ பொண்ணு ஆட்டம் தாங்கல என்ற படி சங்கரிடம் சென்றான் ஆதி ...