(Reading time: 13 - 25 minutes)

" சொல்லலாம் தான் ..! அப்பறம் காவியை கட்டிகிட்டு நான் சன்யாசம் போகணும் டீ .. எனக்கு காவி ட்ரெஸ் வேற சூட் ஆகாதே "என்று கவலையாய் அவன் நடிக்கவும் தலையில் அடித்து கொண்டாள் காவியா..

"ஓடு மேன் .. போ போ ..போயி உன் ஆளை சமாதனபடுத்து .. ! எனகென்னமோ உங்க லவ்க்கு கிரீன் சிக்னல் விழுந்துடுச்சுன்னு தோணுது " என்றாள்  உல்லாசமாய் ..

"எப்படி ?"

" எல்லாம் தெரிஞ்சும் முகில்மதியை போயும் போயும் உன்னைய நம்பி அனுப்பி வைக்கிறாங்களே ! அந்த ஒரு காரணம் போதாதா?" என்றவள் கேட்கவும் அலட்சியமாய் தோளை  குலுக்கினான் அன்பெழிலன் ..

" என்னமோ போடி " என்றான் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

" ஷபா  இதென்ன காரா இல்லை லைப்ரரியா ?" கோபமாய் அன்பெழிலனை கேட்டாள்  முகில்மதி .. காரில் வந்ததில் இருந்து அவளும் ஏதேதோ பேச சிலையாய் அமர்ந்திருந்தான் எழில் .. எப்போவாவது காரை பார்ப்பது போல கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்த்து கொண்டான் .. அவள்  அசந்த வேளையில் லேசாய் சிரித்தும் வைத்தான் ..

" என்னத்தான் இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் இருக்க கூடாது எழில் ."

(யாருக்கு எனக்கா ? ) மனதிற்குள் பேசினான் அவன் ..

" நான் என் மேல தப்பு இல்லன்னு சொல்ல வரல .. ஆனா அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தரணுமா ?"

(தண்டனையா ? மேடம் உங்களுக்கு இன்னும் என் தண்டனையை பற்றி ஒண்ணுமே தெரியல ..இதெல்லாம் வெறும் ஜுஜுபீ )

"  ஓவரா இருக்கு நீங்க பண்ணுறது !"

(ஹும்கும் நீ மட்டும் அளவா பண்ணுறியாக்கும்  )

" இப்படியே பேசாமல் இருந்தால் என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிடலாம் நினைக்காதிங்க  எழில் .. இந்த ஜென்மத்துல நான்தான் உங்க பொண்டாட்டி " அவள் அழுத்தமாய் சொன்ன விதத்தில் சடன் ப்ரேக் போட்டுவிட்டு அவளை பார்த்தான்  அன்பெழிலன் ..

( என்னாச்சு இவளுக்கு ? நேத்து இதே காருல ராவணன் கிட்ட பேச வேண்டிய வசனம் பேசினா .. இப்போ ராமன் கிட்ட பேசற டைலாக் பேசுறாள்)

" நீங்களே வேணாம்னு சொன்னாலும் நான் உங்களுக்குத்தான் "

(ஹும்கும் அடிப்பாவி ... நான் எப்போடி உன்னை வேணாம்னு சொன்னேன் ?)

" இப்போ நீங்க பேசல , நான் காருல இருந்து குதிச்சுருவேன் "

" ஹே ஒரு நிமிஷம் "

" என்ன ?"

" இந்த பக்கம் கதவு லாக் பண்ணி இருக்கும் .. நீ அந்த பக்கம் குதி " என்றான் எழில் .. கோபத்தில் பற்களை கடித்தபடி முறைத்தாள்  அவள் ..

" சும்மா முட்டை கண்ணை போட்டு உருட்டாதே தாயே .. கொஞ்சம் பேசாம வா .. "

" காயா பழமா சொல்லுங்க "

" முடியாது .. கொஞ்சம் நேரம் நை நைன்னு பேசாமல் இரு ".. அதன்பின் அவனை எதுவும் பேசாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்பதுபோல் பதுசாய் இருந்தாள்  முகில்மதி .. அவள் அறியாதவண்ணம் அவளை பார்த்து கொண்டிருந்தான்  அன்பெழிலன் .. இப்படியாய் இவர்களின் கண்ணாமூச்சி இன்னும் ஆறு மாதங்கள் தொடர்ந்தது .. அதே ஆறு மாதத்தில் இவங்களுக்கு தெரியாமலே , இவங்களுக்கு திருமண ஏற்பாடுகளும்  முடிவெடுக்க பட்டிருந்தது .. ஆனா யாருக்கு யாரு ஜோடி ? அதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் ..

ஆறு மாதங்களுக்கு பிறகு ,

" வெண்ணிலவே வெண்ணிலவே விளையாட வருவாயா ?

விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் "

மலர் இல்லத்தின் மொட்டை மாடியில் கடற்கரையையும் பௌர்ணமி நிலவையும் ரசித்தபடி தன் நிலவுடன் கன்னத்தோடு கன்னம் இழைத்தபடி நின்றிருந்தான் மதியழகன் ..

" டேய் "

" ம்ம்ம் என்ன பேபி "

" அதென்ன அதிகாலை அனுப்பி வைப்போம் ? "

" காலையில நீ உன் வீட்டுக்கு போகணும்ல அதான் " என்று கள்ளத்தனமாய் சிரித்தான் மதியழகன் ..

"  காலையில நான் எதுக்கு வீட்டுக்கு போகணும் .. நாளைக்கு என்னனு மறந்து போச்சா ?"

" நாளைக்கு என்ன ? எனக்கு நியாபகம் இல்லையே " மீண்டும் கள்ளத்தனமாய் அதே சிரிப்பு ..

" டேய் உன்னைய " என்று நிலா பல்லை கடிக்க ,

" ஹே ஹனிமூன் " என்றபடி அங்கு வந்து குதித்தாள்  புவனா .

" ஹே குரங்கு நீ என்னடி குதிச்சு வர்ற ?"

" நான் ஒரு அட்வேன்சரஸ்  கேர்ள்  மா .. எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் " என்றாள்  புவனா ..

" சரி இங்கென்ன பண்ணுற நீ ?"

" அதை நான் கேட்கணும் ... பொண்ணா  , அடக்க ஒடுக்கமா ஒரு எடத்துல இருக்காம என் அண்ணாவை கடத்திட்டு வந்துருக்கியா நீ ? நாளைக்கு ரெண்டு பேருக்கும் பார்த்துக்க தானே போறீங்க ? இப்போ என்ன அவசரம் .. என் கூட வா "

" அதெல்லாம் மாட்டேன் போடி "

" அப்படியா ? சரி இருந்துட்டு போ .. அண்ணா வாங்க நாம போகலாம் " என்று அவள் கூப்பிடவும் , மதிபவ்யமாய் சிரித்து கொண்டே போனான் ..

" டேய் , என்னையா  விட்டுடு போற , நாளைக்கு உன்னை பேசிக்கிறேன் " என்று தேன்  நிலா முறைக்க , அப்படி என்னத்தான் நடக்குதுன்னு அடுத்த எபிசொட்ல சொல்றேன் ..

தொடரும்

Episode # 32

Episode # 34

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.