அவனும் “எழுந்திறீங்க மா என்று சொல்ல” அவள் உணர்ச்சி பெருக்கில் சொன்னாள் “அம்மா என் கடை வாடகை ரெண்டு மாசம் கட்டலை நாளைக்குள்ள கட்டலன்னா கடைய தூக்கிடுவேன்னு சொல்லியிருந்தாங்க உன் கடைக்கும் வழி பிறக்கும்ன்னு அந்த சாமியார் சொன்னாரு” அதேமாதிரி நீங்க என்று அவள் சொல்ல இருவரும் ஆச்சர்யத்தின் உச்சியில் இருந்தனர்.
ஆதி வேற காஷ் இல்லையா பாக்கெட்ல பாருங்க என்று சொல்ல, இல்லமா என்றான் அவன்.
வேணாமா இதுக்கு மேல ஒரு ரூபா வாங்கினா கூட அது நீயே உன் கணக்குல சேத்துக்குற பாவம்ன்னும் சொல்லிட்டு தான் போயிருக்காரு இந்த ஐயாயிரத்துல என் பிரச்சனை தீர்ந்து பூ வாங்க கூட முதலுக்கு பணம் நிக்கும் எனக்கு அது போதும் என்றாள்.
என்ன ஆதி இது? என்றாள் அவள் .”.முதல்ல அதுல என்ன இர
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றாள் அவள்.
புண்ணியம் செய்யவாவது நமக்கு கணக்கு வேண்டும் என்றான் இவன்.
எவ்வளவு செய்தாலும் தீரவில்லை, போதவில்லை என்றாள் அவள்.
சுரக்க சுரக்க தான் எடுக்க வேண்டும் ஒரேடியாக எடுத்தால் சுரப்பதே நின்றுவிடும் என்றான் இவன்.
அவனுக்கு பழிப்பு காட்டி உதடு சுளிப்பாள் அவள்.