(Reading time: 8 - 15 minutes)

ரவில், மதி,நிலா, ஷக்தி, கதிர், புவனா நால்வரும் அமர்ந்திருக்க அவர்களை  தேடி வந்தாள் மித்ரா..

“ நான் உங்க எல்லாருகிட்டயும் ஒரு விஷயம் பேசனும்” என்றாள் அவள்.. ஷக்தி அவளை ஆர்வமாய் பார்க்க மற்றவர்கள் கேள்வியாய் பார்த்தனர்..

“ என்ன மித்ரா ?” – மதி

“ அண்ணா, அந்த பையனுக்கு கல்யாணம் ஆச்சா ?”

“ எந்த பையனுக்கு ?”

“ அதான் இன்னைக்கு வீட்டுக்கு வந்தாங்களே” புவனாவை பார்த்துகொண்டு அவள் கூற, புவனாவோ அவனின் பெயரை மௌனமாய் உச்சரித்து பார்த்தாள்..

“ ஓ, டீ ஆர் ஆ ?”

“ அதென்ன டீ ஆர் ?” –மித்ரா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

“ அவங்க பேரு தமிழ் ரஞ்சன்.. அதைதான் எல்லாரும் சுருக்கி சொல்றாங்க” என்று சொல்லும்போதே புவனாவின் குரல் இளகியது.. அதை மற்ற நால்வருமே கவனித்தனர்..

“ரஞ்சனுக்கு கல்யாணம் ஆகல.. ஏன் கேட்குற ? “ என்றான் மதி ..

கதிரை ஓரக்கண்ணால் பார்த்தப்படி

“ ரஞ்சனுக்கும் காவியாவுக்கும் கல்யாணம் பேசினா என்ன ?” என்றாள் சங்கமித்ரா.. கதிர்,புவனா இவருவரின் முகமும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியை காட்ட

“ஷபாஷ் டீ அத்தை பொண்ணு” என்று பார்வையாலேயே அவளை மெச்சினான் ஷக்தி..

அவங்க ரெண்டு பேரில் யார் முதலில் வாய திறக்க போறாங்க ? அடுத்த எபிசோட்ல சொல்றேன்..

ஹாய் ப்ரண்ட்ஸ்..  சில மனப்போராட்டங்களுக்கு நடுவில் சந்தோஷமாய் எழுத கடிமாக உள்ளதால், இந்த எபிசோட் இங்கே முடிக்கிறேன்.. அடுத்த எபிசொட்ல எழுதுறதுகுள்ள சரி ஆகிடுவேன்.. மன்னிக்கவும்..நன்றி..  

தொடரும்

Episode # 35

Episode # 37

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.