(Reading time: 38 - 76 minutes)

துமட்டுமில்ல.. அன்னைக்கு நடந்ததுக்கு நாம மட்டுமில்லாம... பெரியவங்களும் ரொம்ப கூனி குறுகிப் போய்ட்டாங்க... அப்புறம் உங்க மேல கோபப்பட்டு, என் மேல கோபப்பட்டு... எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து... இன்னைக்கு நாம சேர்ந்த சந்தோசத்துல இருக்காங்க... இப்போ திரும்பவும் இந்த விஷயத்தைப் பேசி... அய்யோ யுக்தா தான் தப்பு செஞ்சதா எல்லோரும் நினைச்சிட்டோமேன்னு அவங்கல்லாம் வருத்தப்படனுமா..?? வேண்டாம் பிருத்வி... நான் தப்பு செய்யாதவன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு இல்ல.. அதுவே எனக்கு போதும்..."

"ஆனா என் மனசு கேக்கலையே... கவிக் கூட அன்னைக்கு உன்னை சந்தேகப்பட்டு.. உன்கிட்ட பேசாமயே இருந்தாளே... எல்லாதுக்கும் காரணம் நான் தானே..??"

"நான் இதைப்பத்தி கவிக்கிட்ட கொஞ்ச நாள் முன்னாடியே சொல்லிட்டேன்.. அவ இதை நான் உங்கக்கிட்ட சொல்லனும்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அதனால சும்மா நீங்க தப்பு செஞ்சதா நினைச்சு வருத்தப்படாதீங்க.. என்ன.." என்று அவள் ஆறுதல் சொன்னதும் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... இவள் என்ன என்று புருவத்தை தூக்கி கேட்டாள்..

"ஒன்னுமில்ல... அன்னைக்கு நீ எவ்வளவு கோபமா பேசின... அந்த யுக்தாவா இதுன்னு யோசிச்சேன்... அன்னைக்கு கண்ணகி, மாதவின்னு ஏதோ கதையெல்லாம் சொன்ன..??"

"ஓ அதுவா... நம்ம கல்யாணம் நடக்கறது சரியா இருக்காதுன்னு தோனுச்சு.. அதான் அப்படி கோபமா பேசுனா  எல்லோரும் இந்த கல்யாணத்தை நிறுத்துடுவீங்கன்னு நினைச்சேன்... ஆனா அப்படி நடக்கல... ஆனா பிருத்வி ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தா.. அப்போ நான் அந்த மாதவி மாதிரி தான் இருந்திருப்பேன்... என்னால உங்களை தவிர வேற யாரையும் என் வாழ்க்கையில நினைச்சுப் பார்க்க முடியாது பிருத்வி..." என்று அவள் சொன்ன போது...

அதைக்கேட்டு உருகியவன்... இத்தோடு பேச்சுக்கள் போதும் என்பது போல் அவள் முகமெங்கும் முத்தத்தால் குளிப்பாட்டினான்...  கடைசியாக இதழ் நோக்கி வந்த போது அவனை அவள் தடுத்து நிறுத்தினாள்..

"பிருத்வி.. இத்தனை நாள் நாம பிரிஞ்சிருந்ததால... உங்க நிலைமை எனக்குப் புரியுது... ஆனா எனக்கொரு ஆசை இருக்கு பிருத்வி... அதை உங்கக்கிட்ட நான் சொல்லனும்..."

"என்ன..?"

"பிருத்வி நமக்கு கல்யாணம் ஆனதும், நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு உங்க தோள்ல சாஞ்சிக்கிட்டு உங்கக் கூட நான் விடிய விடிய எப்படியெல்லாம் நாம வாழனும்னு எனக்கு இருந்த கற்பனை... நாம வாழப் போற வாழ்க்கையில எனக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசை, இதையெல்லாம் பேசனும்னு நான் ஆசைப்பட்ருக்கேன்..." என்று அவள் சொன்ன போது அவன் அவளை வியப்பாக பார்த்தான்...

"என்னடா ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு பேசனும்னு சொல்றாளேன்னு பார்க்கிறீங்களா..?? எனக்கு தெரியல பிருத்வி... எப்படி உங்களை பார்த்து, எப்படி என்னோட காதலை சொல்லி, எப்படி நம்ம கல்யாணம் நடக்கும்னு எனக்கு தெரியல... அதான் நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல உங்கக்கிட்ட பேசனும்னு நான் காத்துக்கிட்டு இருந்தேன்...

ஒருவேளை நாம சாதாரண காதலர்களா இருந்து நிறைய பேசியிருந்தா... இந்த ஆசையெல்லாம் மறைஞ்சுப் போயிருக்குமோ என்னவோ... ஆனா நாம ரெண்டுப்பேரும் சாதாரண காதலர்களாகவும் இல்லை... நம்ம கல்யாணம் நார்மலாவும் நடக்கல... நம்ம கல்யாணம் நடந்த நைட் நீங்க ஒரு ரூம்ல, நான் ஒரு ரூம்ல... அதனால என்னோட ஆசை நிறைவேறவே இல்லை... ஒரு கட்டத்துக்கு மேல, என் ஆசை நிறைவேறாமயே போய்டுமோ... உங்கக்கிட்ட மனசுவிட்டு பேசாமயே இருந்துடுவேனோன்னு கூட நினைச்சிட்டேன் பிருத்வி...

இப்போ இந்த ரூமை பார்த்ததும் இதுதான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ன்னு தோனுது... நாம விடிய விடியக் கூட பேச வேண்டாம்... கொஞ்ச நேரம்  பேசினா கூட போதும்.." என்று அவள் குழந்தைதனமாக கேட்டப்போது...

அவள் இதழில் வந்து நிறுத்திய தன் வேலையை முடிக்கும் விதமாக இதழிலும் தன் முத்திரையை பதித்தான்... பின் அவள் கைகளைப் பற்றியவன்... "விடிய விடிய என்ன...  எத்தனை நாள் வேணாலும் நாம இப்படி பேசிக்கிட்டு இருக்கலாம்... அதை தாண்டி நமக்குள்ள இப்போ எதுவும் வேண்டாம்... சரியா..??" என்றான்.

"அய்யோ அதில்லை பிருத்வி..." என்று அவள் ஏதோ சொல்ல வந்ததை தடுத்தவன்...

"நாம இவ்வளவு நாள் பிரிஞ்சிருந்ததால நமக்குள்ள எல்லாம் இப்பவே நடக்குனும்னு இல்லை யுக்தா... எனக்கு தெரியும் நீ ஏன் இப்படி யோசிக்கிறேன்னு... போதையில தான் நாம எல்லை மீறீட்டோம்னா... நம்ம கல்யாணத்துக்கு பிறகு கூட உன்னோட அனுமதியில்லாம உன்னை நான் நெருங்கியிருக்கேன்... அதை நினைச்சு தானே நீ இப்படி யோசிக்கிற...??

உனக்கு தெரியாது யுக்தா... உன்னோட விருப்பமில்லா உன்னை தொட்டப்பல்லாம் நான் என்னை நினைச்சே கோபப்பட்டிருக்கேன்... ஆனா நீ என்னை விட்டு விலகினப்போ அப்படியாவது உன்னோட கொஞ்ச நேரம் இருந்தது தான் எனக்கு ஆறுதலே... அதான் அப்போ நான் அப்படி நடந்துக்கிட்டேன்... ஆனா இப்போ அப்படியில்ல... என் யுக்தா எனக்கு கிடைச்சிட்டா... அவக் கூட நான் வாழப்போற வாழ்க்கையில நான் எதுக்கும் அவசரப்பட மாட்டேன்... முன்ன அப்படி நடந்துக்கிட்டதுக்கு ஸாரி..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.